ராஜஸ்தானில் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக எம்.எல்.ஏ.க்கள் இருவரை பாரதீய ஜனதா கட்சி இடைநீக்கம் செய்தது.
இதன்படி, ‘அட்டர் சிங் பாந்தா மற்றும் பிரஹலாத் குன்ஜால் ஆகியோர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாகவும், ஒரு வார காலத்தில் அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷர்மா தெரிவித்தார்.
மேலும், அவ்வாறு விளக்கமளிக்கவில்லை என்றால், அவர்களை நீக்குவது குறித்து தலைமையிடத்தில் பரிந்துரைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
குர்ஜார் விவகாரத்தில் மாநில முதல்வர் வசுந்தரா ராஜேவின் மோசமான செயல்பாட்டின் காரணமாக, அடுத்தத் தேர்தலில் கோட்காவில் உள்ள இரு தொகுதிகளில் அவருக்கு எதிராக இவ்விருவரும் செயல்பட திட்டமிட்டிருந்தனர். இதனை காரணம்காட்டி அவ்விருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மேலும் 20 எம்.எல்.ஏ.க்களுக்கு பாரதீய ஜனதா கட்சி எச்சரிக்கை விடுத்திருக்கின்றது.
மறுமொழியொன்றை இடுங்கள்