ஆங்கில புலமையுடையவர்களுக்கு திமுகவில் எம்.பி பதவி!

மேடைகளிலும், சினிமாக்களிலும் அரைகுறை ஆடையில் தமிழக மக்களுக்கு நாட்டிய விருந்து படைத்த ஒரே தகுதியினூடாக அ.தி.முக தலைமை பதவியை வகிக்கும் செல்வி(?!) ஜெ.ஜெயலலிதா அவர்கள், தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் வழங்கப்பட்டது எந்த தகுதியின் அடிப்படையில் என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளிக்கும் போது திமுக மகளிரணி பிரமுகரான கவிஞர் விஜயா தாயன்பன் கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“முதல்வர் கருணாநிதி, தமிழகத்திற்கும், தமிழ் மொழிக்கும், திராவிட இயக்கத்திற்கும் செய்த தியாகமும், உழைப்பும் அளவிட முடியாதது.

அதனால் முதல்வர் கருணாநிதியின் மகள் என்ற தகுதி மட்டும் கனிமொழிக்கு போதுமானது என்றாலும், அவர் நன்கு படித்தவர், நல்ல கவிஞர். ஆங்கிலத்தில் புலமை வாய்ந்தவர். மாநிலங்களவை உறுப்பினராவதற்கான அனைத்து தகுதியும் அவரிடம் இருக்கிறது” 

ஆகவே ஆங்கில புலமை வாய்ந்தவர்கள் உடனடியாக தமிழுக்காகவும், தமிழின வளர்ச்சிக்காகவும் தனது வாழ்நாளையே செலவழித்துக் கொண்டிருக்கும் கலைஞரிடம் உடனடியாக மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக விண்ணப்பிக்கலாம்.

அப்பாடா, அப்படியாவது பாராளுமன்றம் கிரிமினல்களிடமிருந்தும், நாட்டிய, ஆபாச பரதேசிகளிடமிருந்தும், ரவுடிகளிடமிருந்தும் விடுதலை அடைகின்றதா எனப்பார்ப்போம்.

புலிகளுக்கு எதிராக இஸ்ரேல்!

இஸ்ரேலிடம் இருந்து நவீன புளு ஹொரிசோன் – 02 எனப்படும் ஆளில்லாத உளவு விமானங்களை வாங்குவதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான இந்த விமானங்களை இலங்கை அரசு எவ்வித பரிசோதனைகளையும் மேற்கொள்ளாமலும், வேறு நாடுகளிடம் இருந்து கேள்விப்பத்திரங்களை(Tenders) கோராமலும் வாங்க முடிவெடுத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்த உளவு விமானங்கள் தொடர்பாக மேலதிக தகவல்களை அறிய பயணம் மேற்கொண்ட இலங்கையின் பாதுகாப்புத்துறை மற்றும் வான்படை அதிகாரிகள் குழுவில் இடம்பெற்றிருந்த மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும், பாதுகாப்புத்துறை ஆலோசகருமான முனிந்திரதாச உடல்நிலை பாதிக்கப்பட்டு இஸ்ரேலில் மரணமாகியிருந்தார்.

முனிந்திரதாச ஆளிலில்லாத உளவு விமானங்கள் தொடர்பான தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்கு முன் இந்தியாவில் காஷ்மீர் தீவிரவாதிகளை எதிர்கொள்வதற்காக இந்திய இராணுவத்தினருக்கு பயிற்சியளிக்க இஸ்ரேலிய மொசாத் மற்றும் இராணுவ உயாரதிகாரிகள் இந்தியா வந்தடைந்ததுகவனிக்கப்படவேண்டிய விஷயமாகும்.

இலங்கை, செய்திகள் இல் பதிவிடப்பட்டது . 1 Comment »

பர்தாவுக்கு எதிராக புதிய ஜனாதிபதி.

ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராஜஸ்தான் கவர்னர் பிரதீபாபட்டீல், ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இந்தியாவில் பெண்கள் பர்தா அணிவது எதிராக கருத்துக்களை தெரிவித்தார்.

“பெண்கள் முகத்தை மூடும் பர்தா அணிய தேவை இல்லை. எத்தனையோ ஆண்டுகளாக இருந்து வந்த இந்த பழக்கத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்தியாவில் பெண்கள் பர்தா அணியும் பழக்கம் முகலாயர் ஆட்சி காலத்தில் தான் ஏற்பட்டது. படையெடுத்து வந்த முகலாயர்களிடமிருந்து தங்களை பாதுகாக்கவே பெண்கள் பர்தா அணிந்தனர். தற்போது சுதந்திர இந்தியாவில் அதற்கான அவசியம் ஏதும் இல்லை. எனவே பெண்கள் அவற்றை விட்டு வெளிவர வேண்டும்” என்று கூறினார்.

புதிய ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ப்ரதிபா பெண்களின் முன்னேற்றத்திற்காக குரல் கொடுக்கக் கூடியவர் என்பதும், அவர்களின் விடுதலைக்காக பாடுபடக் கூடியவர் என்பதும் அவரின் பர்தாவை குறித்த இக்கருத்துக்களில் இருந்து தெளிவாகிறது.

நாட்டில் பெண்களின் விடுதலைக்கும், முன்னேற்றத்திற்கும் இத்தகைய தலைவர்கள் நாட்டிற்கு தற்போது மிக அவசியம் ஆகும். அவர் ஜனாதிபதியாக தேர்வாக வாழ்த்துவோம்.

இந்தியா, செய்திகள் இல் பதிவிடப்பட்டது . 6 Comments »

தரமான அரசியல்வாதி!

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நெல்லை பொருட்காட்சி மைதானத்தில் நேற்று நடைபெற்ற மண்ணுரிமை மாநாட்டில் கருணாநிதி கலந்து கொண்டு பேசும் பொழுது, “இந்த மாநாட்டில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற வேண்டுமானால் சாதி ஒழிய வேண்டும்” என்று கூறிய கருணாநிதி, “சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கருத்தை வலியுறுத்தி தாம் நாடகம் எழுதியதாக” கூறினார்.

“இந்த கருத்தை வலியுறுத்தி திருமாவளவன் நிறைவேற்றியிருக்கும் தீர்மானத்தின் மீது தம்மால் ஆன நடவடிக்கைகளை எடுப்பேன்” என்றும் முதல் அமைச்சர் கருணாநிதி கூறினார்.

“சாதிகள் ஒழிய வேண்டுமானால் திருமாவளவன் போன்றவர்கள் சம்பந்தப்பட்ட மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்” என்றும் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.

“பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய பெரியார், அண்ணா போன்ற தலைவர்களை அந்த மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால், அவர்களால் சாதி ஒழிப்பில் முழு வெற்றியை அடையமுடிய வில்லை” என்றும் அவர் கூறினார்.

 கடந்த முறைக்கு முந்தைய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அன்று முளையெடுத்த தலைவனை மட்டுமே கொண்ட சாதி கட்சி முதல் மாடன், சுள்ளன், குப்பன் என ஒரு சாதியையும் விடாமல் அனைத்து சாதி கட்சிகளை தேடிப்பிடித்து கூட்டணி வைத்துக் கொண்ட பகுத்தறிவு காவலர் கருணாநிதி பேசும் பேச்சா இது என ஆச்சரியப்படுபவர்கள் அவர் தற்போது ஓர் தரமான இந்திய குறிப்பாக தமிழக அரசியல் களத்தில் கொட்டை போடும் அரசியல்வாதி என்பதை நினைவில் கொள்க.

செய்திகள், தமிழகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

பாகல்பூர் கலவரம் – 14 பேர் குற்றவாளிகள்.

பீகார் மாநிலம் பாகல்பூரில் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராக ஹிந்துத்துவ நாச சக்திகளால் 1989 – ல் கலவரம் நடத்தப்பட்டது. இதில் சிறுபான்மையினர் 116 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவ்வழக்கில் காவல்துறை அதிகாரி மற்றும் கிராம தலைவர் உட்பட 24 பேர் மீது வழக்கு பதிவு செய்து குற்றம்சாட்டப்பட்டது. 18 வருடங்களுக்குப் பிறகு இவ்வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 14 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஷம்புநாத் மிஸ்ரா, இவர்களுக்கான தண்டனை இம்மாதம் 27ம் தேதி அறிவிக்கப்படும் என்றார்.வழக்கின் முடிவு குறித்து கேட்டுக் கொண்டிருந்த குற்றவாளிகளில் ஜெய் பிரகாஷ் மண்டல் என்பவர் நீதிமன்றத்திலிருந்து தப்பியோடி விட்டார். அவரைப் பிடிக்க பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் இந்த சம்பவம் நடைபெற்ற போது ஜக்தீஷ்பூர் காவல்நிலையத்தின் பொறுப்பாளராக இருந்த ராமச்சந்திர சிங் மற்றும் கிராமத்தலைவர் தாக்குர் பாஸ்வான் ஆகியோரும் குற்றவாளிகளே என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்ட 24 பேர்களில் 6 பேர் மரணமடைந்துவிட்டனர். மற்ற நான்கு பேர் தலைமறைவாகியுள்ளனர்.நாட்டில் நடந்த சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்களில் மிக அதிகபட்சமாக குற்றம் சுத்தப்பட்டவர்கள் அனைவருமே குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது இதுவேமுதல்முறை என கருதப்படுகிறது.

இந்தியா, செய்திகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »