தீப்பிடிக்கத் தீப்பிடிக்க என்னைத் தொடுடா…!

“இலக்கியங்கள் சொல்லும் காதல் பெரிய ஏரியா. அது ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. அதை விட்டு விட்டு விஞ்ஞானம் என்ன சொல்கிறது என்று மட்டும் பார்ப்போமா? ஒரு ஆணும் பெண்னும் சந்திக்கும் போது காதல் தோன்றுவதற்கு முன்னால், அட்ரினலினைப் போன்ற ரகளையான ரசாயனம் நரம்புகளின் வழியே ஒரு பூகம்பம் போல் வெடித்துக் கிளம்புகிறது. (இதைத்தான் `ஒரு வித்தியாசமான ஃபீலிங்’ என்கிறார்கள் காதலர்கள்) ஃபினைல்தைலமைன் என்கிற ரசாயனம் (காதலிகளுக்கு விருப்பமான சாக்லேட்டில் இது நிறைய உண்டு) அப்போது நரம்பு செல்களுக்கிடையே ரொமான்டிக்கான செய்திகளைப் பரப்புகின்றது. இதனுடன் டோபோமைன் மற்றும் நோர்பைன்ஃபரைன் போன்ற உற்சாக ரசாயனங்களும் கை கோர்த்துக் கொள்ள, அட்ரினலின் சுரந்து இதயம் ஏகாந்தமாய் உணர்ந்து படபடவென்று அடித்துக் கொள்கிறது. ஆண் பெண்ணுக்கிடையே காதல் தொடர்ந்து நீடிக்க ஆக்ஸிடோசின் என்கிற ரசாயனம் பெரும் உதவி செய்கிறது என்பதும் ஆச்சர்யமான செய்தி. இந்த கெமிக்கல் ரியாக்ஷன் எந்த ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயும் எப்போதும் தோன்றலாம். மற்றபடி கள்ளக்காதல் என்பதெல்லாம் நம்முடைய தமிழ் தினசரிகள் கண்டுபிடித்த கெட்ட வார்த்தை”

அரசு பதிகள் — குமுதம் 01/10/2008 இதழ்

மேலும்…

நன்றி: இந்நேரம்.காம்

காதல், சிந்தனைகள் இல் பதிவிடப்பட்டது . 1 Comment »

கருணாவின் அந்தரங்கம் 5.

கருணாவின் துரோகச் செயலைப் புரிந்து கொண்டிருந்த தளபதிகள், பொறுப்பாளர்கள் தமது ஆதங்கத்தையும் அடுத்து அவர்கள் செய்ய வேண்டிய நடவடிக்கைகளையும் யாருடன் கதைப்பது என்று தெரியாது திணறுகின்றனர். பிறிதொருவருடன் கதைக்கும் பட்சத்தில் என்ன நடக்குமோ என அஞ்சி அவர்கள் தங்களுக்குள்ளே பல திட்டங்களைப் மனசுக்குள் போராடுகின்றனர். 

இவ்வாறு நிலைமைகள் காணப்பட, கருணாவும் தனது துரோகச் செயல் தன்னுடன் இருந்தவர்களுக்குத் தெரியவந்துள்ளது என்பதையும் அறிந்து கொண்டார். தனது துரோகத்தனத்தால் தனது உயிருக்கு எந்தவகையில் ஆபத்துகள் வரும் என்பதை கருணா சரிவரவே புரிந்துகொள்கிறார். தரைக் கரும்புலிகளால் தனது உயிர் பறிக்கப்படலாம் அல்லது விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் போராளிகளால் தனது உயிர் எடுக்கப்படலாம் என்பதை புரிந்து கொண்ட கருணா அடுத்தகட்டமாக திட்டம் ஒன்றை தீட்டுகிறார்.

முதலில் மட்டக்களப்பில் இருந்கும் கரும்புலி வீரர்கள்  மற்றும் புலனாய்வு வேலை செய்யும் பொறுப்பாளர்கள் போராளிகளை தனது விசுவாசிகள் மூலம் கைது செய்கிறார். அப்போராளிகளைக் கண்மண் தெரியாது தடிகள், கம்பிகள், கட்டைகள் கொண்டு கருணாவின் தலைமையில் அவரது விசுவாசிகள் அடிக்கின்றார்கள். இதனால் பயிற்சி முகாம் முழுவதும் அப்போராளிகளின் அழு குரல் ஒலித்த வண்ணம் இருந்தது.

கருணா ஏன் தங்கள் மீது இவ்வாறு நடந்துகொள்கிறார்? நாங்கள் என்ன தவறு செய்தோம்? என பல கேள்விகள் போராளிகள் மனதில் வந்து சென்றன. கருணாவின் துரோகத்தைப் புரிந்துகொள்ள முடியாத போராளிகள் கருணாவின் சதி வலைக்குள் சிக்கி அடிகாயங்களுடன் இரத்தம் ஓட ஓட  கால்கள், கைகள் முறிக்கப்பட்டு பயிற்சி முகாமின் வெட்டையில் நடுவெய்யிலில் குற்றுயிருடன் இழுத்துக் கொண்டு போடப்படுகிறார்கள்.

இதனைப் பார்த்துக்கொண்டு போராளிகள் அனைவருக்கும் இங்கு என்ன நடக்கிறது என்பது புரியவில்லை. தளபதிகள் சிலருக்கும் பொறுப்பாளர் சிலருக்கும் இந்த கருணாவின் சதி நாடகம் என்ன என்பது தெளிவாகவே புரிந்தது. தளபதிகள் மற்றும் பொறுப்பாளார்கள் சிலர் ஒரு சில முடிவை எடுக்கின்றனர். இப்பிரச்சினையை கருணாவுடன் கதைத்தால் நமக்கும் இதே கதிதான் என்பதை உணர்ந்து கொள்கின்றனர். வழமை போன்று எதுவும் அறியாதவர்கள் போல் மிகவும் குழப்பத்தில் இருந்து கொண்டு தமது தேசியத் தலைவருக்கு தகவலைத் தெரிவிக்க வேண்டும் என்பதில் உறுதிகொண்டு அங்கிருந்து தப்புவதற்கான திட்டங்கள வகுக்கின்றனர்.

இதற்கிடையில் கருணா சில தளபதிகள் மற்றும் பொறுப்பாளர்களை தனித் தனியே அழைத்து தான் பிரிந்து செல்லும் தனது முடிவை விளங்கப்படுத்துகிறார். இதனால் மூத்த போராளிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. அத்துடன் அவர்களால் கருணாவுக்கு நல்ல அறிவுரைகள் வழங்கப்பட்டன.

(தொடரும்)

படித்தது

ஈழப்போராட்டத்தில் தென்னிந்திய கட்சிகளின் ஈடுபாடு…..?

nedumaran.jpgஈழப்போராட்டம் குறித்து எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. ஆனால் அதையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு வேறு சில விஷயங்களை அலசலாம். சமீபகாலமாக ஈழப்பிரச்சினையில் இரண்டு குரல்களை மீண்டும் மீண்டும் கேட்கநேர்கிறது.

குரல்1 : ஈழப்போராளிகள் திராவிட இயக்கங்களோடு கொண்ட தொடர்பால்தான் போராட்டம் திசைமாறிப்போனது.

‘தமிழீழப் போராட்டத்தில் தந்தை பெரியாரின் தாக்கம்’ என்ற பெயரில் ஒரு கட்டுரை ‘திராவிடத்தமிழர்கள்’ வலைத்தளத்தில் வெளியாகியிருந்தது.

தேசியத்தை மறுத்து பெரியார் பேசிய பேச்சு 1932ல் அவர் இலங்கையில் ஆற்றிய உரை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விடுதலைப்புலிகள் இயக்கம் பெரியாரின் ஆலோசனையின் பெயரில்தான் தொடங்கப்பட்டது என்பதில் எல்லாம் எவ்வளவு சரியான தரவுகள் அடங்கியிருக்கின்றன என்பது சந்தெகம்தான். அதேநேரத்தில் இல்லாத பெரியாரை வைத்து அனுமானங்களைத் தோற்றுவிப்பதிலும் அர்த்தமில்லை.

ஆனால் திராவிடக் கட்சிகளும் பெரியாரியக்கங்களும் ஈழப்போராட்டத்திற்கும் போராளிகளுக்கும் பலவகையில் உதவிப் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்திருக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. திமுகவின் முன்னாள் அமைச்சர் சுப்புலெட்சுமி ஜெகதீசன் மதிமுக தலைவர் வைகோ ஆகியோர் புலி ஆதரவு என்பதற்காகவே சிறையில் வாடியவர்கள்.

பெரியாரியக்கங்களின் பங்கும் இதில் மகத்தானவை. ராஜீவ் கொலைவழக்கில் பாதிக்கப்படட்வர்களில் பாதிக்கும் மேற்படவர்கள் திராவிடர்கழகத்தோழர்களே. திராவிடர்கழகம் மட்டுமல்லாது தி.கவிலிருந்து வெளியேறிய பெரியாரியக்கங்களும் ஈழ ஆதரவினால் சந்தித்த இன்னல்கள் அளவிடற்கரியவை.

‘பெரியார் மய்யம்’ என்றும் ‘திராவிடர் மனித உரிமை அமைப்பு’ என்னும் பெயரிலும் இயங்கிவந்த அமைப்பு ஈழத்தில் போய் ஆயதப்பயிற்சி எடுத்துவந்ததால் அந்த அமைப்பு தமிழகத்தில் பல போலிஸ் நெருக்கடிகளைச் சந்தித்து இல்லாமலே போனது. பெரியார் திராவிடர்கழகப் பொதுச்செயலாளர் தோழர்.கோவை ராமகிருஷ்ணன் தடா மிசா என்னும் இரு கருப்புச்சட்டங்களால் நெடுங்காலம் சிறையிலடைக்கப்பட்டார். ஈழ ஆதரவினால் தோழர் கொளத்தூர் மணி சந்தித்த இன்னல்களும் அதிகம்.

ஈழ ஆதரவு என்னும் நிலைப்பாட்டில் வேறுயாரையும்விட அதிகம் உறுதியுடன் நிற்பதும் அதற்காகப் பல இழப்புகளையும் சந்தித்தும் பெரியாரியக்கத்தோழர்கள் மட்டுமே. இப்போது ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள் பலரின் ஆதர்சமாய் இருப்பவர்கள் நெடுமாறனும் திருமாவளவனும்.

நெடுமாறன் இந்தியத்தேசிய காங்கிரசின் தமிழாநாட்டு தலைவராக இருந்தவர். இந்திராகாந்தி மீதான ‘கொலைமுயற்சி’யிலிருந்து அவரைக் காப்பாற்றிய ‘பெருமை’யும் அவரையே சாரும். அவர் எப்படித் திடீர்த்தமிழ்த்தேசியவாதியானார் எனப்து அவர் நம்பிக்கை வைத்திருக்கும் ‘முருகனுக்கே’ வெளிச்சம்.

ஆரம்பத்தில் பிரபாகரனை வெள்ளாளர் என்று நினைத்து அவர் ஆதரித்திருக்கக்கூடும். பிறகு பிரபாகரன் கரையாளர் என்று தெரிந்ததும் ‘பிரபாகரன் ஒரு தலித்’ என்று தலித்முரசு நேர்காணலில் பேட்டிகொடுத்து அந்தர்பல்டி அடித்தார்.

மார்க்சியம் பெரியாரியம் தலித்தியம் என எந்தவித தத்துவங்களின் அடிபப்டையுமற்ற புண்ணாக்குக் கட்சிதான் அவரது ‘தமிழர்தேசிய இயக்கம்’. அவர் கட்சியின் தேசிய உடை என்ன தெரியுமா? தைப்பூசத்திற்கு காவடிதூக்க முருகபக்தர்கள் அணிவார்களே அந்த மஞ்சளாடை. நெடுமாறன் எந்தளவிற்கு ‘மாவீரன்’ போராளி’ என்றால் தனது தமிழர்தேசிய இயக்கம் ஜெயலிதா அரசால் தடைசெய்யப்பட்டபின்னும் அதற்கெதிராக மகக்ளைத் திரட்டவோ போராடவோ தைரியமில்லாத அளவிற்கு.

திருமாவளவன் ஈழ ஆதரவாளரான கதையைப் பார்ப்போம். தேர்தல் அரசியலுக்கு வருவதற்கு முன்புவரை ஈழப்பிரச்சினை குறித்து திருமாவிற்கு ஒரு கருத்தும் இருந்ததில்லை. இப்போது திடீரென்று அவரும் புலிவேஷம் ஆடுகிறார்.

ஆப்பிரிக்க நிலப்பகுதியில் கருப்பர்களின் உரிமைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் கருஞ்சிறுத்தைகள் அமைப்பு. அதன் பாதிப்பில் மகாராட்டிரத்தில் தொடங்கப்படட்துதான் இந்திய விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பு. அதன்கிளையாக தமிழகத்தில் தொடங்கப்பட்டதுதான் டி.பி.அய். மலைச்சாமிக்குப்பிறகு அந்தப் பொறுப்பிற்கு வந்தவர் திருமாவளவன். ஆனால் இப்போது திருமா தனது பேட்டிகளிலெல்லாம் ‘விடுதலைப்புலிகளின் பாதிப்பால்தான் விடுதலைச்சிறுத்தைகள் என்று பெயர் வைத்தேன்’ என்று சொல்லிவருகிறார்.

தேர்தல் அரசியலுக்கு வந்தபிறகு திருமாவுக்கு ஒருவிஷயம் தெளிவானது. தலித்துகளின் உரிமைகளுக்காக மட்டுமே போராடினால் சாதிக்கட்சி என்கிற பெயர்தான் தங்கும். மையநீரோட்ட அரசியலில் வெற்றிபெறவேண்டுமானால் ‘தமிழ்’ அரசியலைத் தூக்கிப்பிடிப்பது ஒன்றே சரியான வழி. அதற்கு ஏற்கனவே மருத்துவர் ராமதாஸ் முன்னுதாரணமாயிருந்தார். திமுக கைவிட்ட தமிழ் அரசியலைக் கையிலெடுத்துக்கொண்டார் திருமா. இப்படித்தான் திருமா ஈழ ஆதரவாளரானார். ஆனால் திராவிட இயகக்ங்களின் அர்ப்பணிப்பிலும் தியாகத்திலும் நூறில் ஒருபங்கு கூட திருமாவிடமோ நெடுவிடமோ காணமுடியாது.

திராவிட இயக்கங்களோடு போராளிகள் கொண்ட தொடர்பால் திராவிடக் கருத்தியல் அந்தப் போராளி இயக்கங்களைப் பாதித்ததா என்பது தெரியவில்லை. ஆனால் அதிகம் பாதிக்கப்பட்டதென்னவோ திராவிட இயக்கங்கள்தான். இப்போது திராவிட அரசியலைப் போராளிகள் கைவிடவேண்டும் (அப்படி எதுவும் இருக்கிறதா என்ன?) என்று குரல் கொடுப்பவர்களின் நோக்கம் போராளி இயக்கங்கள் முற்றுமுழுதாக இந்துத்துவ இயகக்ங்களாக மாறிவிடவேண்டும் என்னும் விருப்பமே.

ஈழப்போராட்டத்தால் தமிழ்மக்கள் மட்டுமில்லாது முஸ்லீம் மகக்ளும் கணிசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுமாதிரியான குரல்கள் அதிகரிப்பது என்பது முஸ்லீம்களை மேலும் மேலும் தனிமைப்படுத்தவும் தமிழ்-முஸ்லீம் முரண்பாடுகளை அதிகப்படுத்தவுமே உதவும். வேண்டுமானால் ஈழத்தமிழர்கள் எல்லாம் இந்துக்கள் என்றால் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தெருவில் இறங்கட்டும்.

ஒருமுறை தோழர் வ.கீதாவுடன் ஈழப்பிரச்சினை பற்ரிப் பேசிக்கொண்டிருக்கும்போது தமிழ்த்தேசியவாதிகளைப் பற்றிச் சொன்னார். ‘இவர்கள் இங்கு பண்ண முடியாத புரட்சியை ஈழம் பற்றிப் பேசித் தணித்துக்கொள்கிறார்கள்’ என்று.

சரி போகட்டும் தொப்புள்கொடி உறவு ராஜராஜ சோழன் இலங்கையைக் கைப்பற்றிய தூசிபடிந்த வரலாறுகள் நரம்பு புடைக்க காசி ஆனந்தனின் ‘பத்துதடவை பாடை வராது…’ என்றெல்லாம் பாடியும் பேசியும் திரியும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் அவர்கள் உணர்வின் அடிப்படையில் ஆதரிக்கும் வைகோவாக இருக்கட்டும் அலல்து பஞ்சத்திற்குக் கடைவிரிக்கும் திருமாவளவனாக இருக்கட்டும் இங்குள்ள ஈழத்தமிழ் அகதிகள் பற்றிப் பேசியிருப்பார்களா? அவர்களின் அடிப்படை உரிமைகளுக்காக் குரல் கொடுத்திருப்பார்களா? ஈழப்பிரச்சினைகளுக்காக இங்கு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் உண்ணாவிரதங்களில் எத்தனை தமிழகத்தில் வதியும் ஈழத்தமிழர்களுக்கானது?

மணியரசன் என்று ஒரு தமிழ்தேசியத் தலைவர் இருக்கிறார். ‘தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி’ என்று ஒரு கம்பெனி நடத்திவருகிறார். அவரிடமிருந்து எழுத்தாளர் ராசேந்திரசோழன் (அஷ்வகோஷ் என்ற பெயரிலும் எழுதுவார்) உள்ளிட்ட சில தோழர்கள் வெளியேறினர். ஏதாவது சித்தாந்தப் பிரச்சினைதான் காரணம் என்று நினைத்தால் நீங்கள் இந்தப் ‘புரட்சிகர’க் கட்சிகளைப் பற்றி தெரியாத அப்பாவி என்று அர்த்தம். அவர்கள் கட்சி உடைந்ததற்குக் காரணங்கள் இரண்டு. இதுபற்றி விலகிய ராசேந்திரசோழன் ‘ததேபொகவிலிருந்து விலகியது ஏன்’ என்று ஒரு சிறுநூலே எழுதியிருக்கிறார்.

ஒருகாரணம் இவர்கள் மயிலம் என்னும் ஊரில் நடத்திய சீட்டுக்கம்பெனியில் ஏற்பட்ட பிரச்சினை. (அடப்பாவிகளா புரட்சி செய்யக் கட்சிகட்டப்போகிறீர்கள் என்று நினைத்தால் கடைசியில் சீட்டுக்கம்பெனிதான் நடத்தியிருக்கிறீர்களா என்று மறுபடியும் கேட்டால் நீங்கள் மீண்டும் அப்பாவிதான்) இரண்டாவதுகாரணம் மாவீரர்நாளுக்கு உரையாற்றச் செல்லும்போது புலம்பெயர்ந்த தமிழர்கள் மணியரசனிடம் நிதியளிப்பார்கள். அதில் ஒரு பகுதியைக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு இன்னொரு பகுதியைத் தான் வைத்துக்கொண்டிருந்திருக்கிறார் தோழர் மணியரசன். கடைசியில் கட்சிக்கு அந்த நிதியைத் தருவதேயில்லை. ஏனென்று கேட்டதற்கு ‘என் வீட்டிற்குக் கலர்டி.வி வாங்கிவிட்டேன்’ என்றிருக்கிறார் தோழர் மணியரசன். இதைக் காரியக் கமிட்டியில் வைத்து வேறு விசாரித்திருக்கிறார்கள்.

சரி இதெல்லாம் அவர்கள் உள்கட்சி விவகார இழவு. போகட்டும். ஆனால் புகலிடத்தமிழர்களிடம் வசூலித்த தொகையில் ஒருசிறு பகுதியையேனும் வீடிழந்து நிலமிழந்து சகோதரர்களைக் கொலைக்களத்தில் பலிகொடுத்து தாயையும் சகோதரிகளையும் பாலியல் வல்லுறவில் பறிகொடுத்து தமிழகத்திற்கு ஒரு நாயை விடக் கேவலமான நிலையில் வந்துசேரும் ஒரு ஈழத்தமிழ் அகதிக்காவது நீங்கள் நிதியளித்திருப்பீர்களா?

தமிழ்வழிக்கல்விக்காகவும் இன்னபிற காரணங்களுக்கவும் நிதிவசூலித்திருக்கிறீர்களே. ஒருமுறையாவது ஈழ அகதிகளின் குறைந்தபட்ச பொருளாதார மேம்பாட்டிற்கு நிதி வசூலித்திருக்கிறீர்களா? ஓட்டுக்கட்சிகளுக்குத்தான் ஈழத்தமிழர்கள் வாக்குவங்கிகள் இல்லை என்பதால் புறககணிக்கின்றன. இந்தத் தமிழ்த்தேசியவாதிகள் ஈழ அகதிகளைப் புறக்கணிக்கக் காரணம் என்ன? வெறும் சாகசவாதப் படம் ஓட்டுவதைத் தாண்டி இவர்களால் தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் என்ன பிரயோஜனம்?

எனக்குத் தெரிந்து புலிகளை ஆதரிக்கும் கட்சிகளிலேயே விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினர் எழுத்தாளர் ரவிக்குமார் மட்டும்தான் அகதிமுகாம் பற்றி ஆராய்ந்து ஒரு அறிக்கையை முதல்வரிடம் கொடுத்தார். அதேநேரத்தில் தந்திரமாக கருணாநிதியும் ஒரு அமைச்சரை அனுப்பி அறிக்கை தயாரிக்கச் சொன்னார். கடைசியில் இரண்டு அறிக்கையும் போய்ச்சேர்ந்த இடம் குப்பைத்தொட்டி.ரவிக்குமார் அறிக்கை தயாரிக்கும்போது சிறுத்தைகள் அதிமுக அணியிலிருந்தனர். இப்போது திமுக அணிக்கு வந்தபிறகு ஒருபேச்சையும் காணோம்.

புலிகளை ஆதரிப்பது ஆதரிக்காமல் இருப்பது என்பதையெல்லாம் தாண்டி ஈழ அகதிகளின் நலன்களில் அக்கறை செலுத்துவதும் கல்வி உள்ளிட்ட அவர்களின் அடிப்படை உரிமைகளுக்காய் அரசிடம் போராடுவதும் போலீஸால் திணிக்கப்படும் பொய்வழக்குகளுக்கு எதிராய்க் குரல்கொடுப்பதும்தான் பாதிக்கப்படுபவர்களும் தமிழர்கள் என்கிற உணர்வுகளையும் தாண்டி மனித உரிமையின் அடிப்படையும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் அஸ்திவாரமுமாகும். அதுவே அறமுமாகும்.

எனவே தமிழக அரசோ இந்திய அரசோ தமிழ்த்தேசிய வீராதி வீரர் வீரபத்திரப் பேரன்களோ ஈழப்போராட்டத்திற்கும் ஈழவிடுதலைக்கும் ஒரு புல்லையும் புடுங்கவேண்டாம். அவர்கள் போராட்டத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அந்த்ப் போராட்டத்திலுள்ள பிரச்சினைகளைக் களைவதற்கும் ஜனநாயகபப்டுத்துவதற்குமான முயற்சிகளை அவர்கள் தேர்ந்துகொள்வார்கள். உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்றிருந்தால் இங்கு அகதியாய்த் தஞ்சமடைந்திருக்கும் ஈழத்தமிழர்களின் அடிப்படை உரிமைகள் குறித்தும் அவர்களின் கல்வி வேலைவாய்ப்பு போன்ற அம்சங்களிலும் கவனம் செலுத்துங்கள். போலீஸ் பூச்சாண்டி போதும் நிறுத்துங்கள்.

மிதக்கும்வெளி – உரையாடவந்தவர்கள் பதிவுடன் தொடர்புடையவை

தொகுப்பு: பிரபஞ்சன்

படித்தது

டெல்லியில் தீவிரவாதிகள் தாக்கும் ஆபத்து!

அடுத்த இரண்டு வாரத்துக்குள் டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. இதை தொடர்ந்து பஸ், ரெயில் நிலையங்கள் உட்பட நகரம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹர்கத் உல் ஜிஹாதி அல் இஸ்லாமி (ஹூஜி) ஆகிய இயக்கங்களை சேர்ந்த தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கூட உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோர்ட்டுகளில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த இருப்பதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு டெல்லி போலீஸ் கமிஷனர் ஒய்.எஸ்.அத்வாலுக்கு உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது. உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் இந்த தகவலை தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், “டெல்லியில் வசிக்கும் சிலருடைய உதவியோடு மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று போலீஸ் கமிஷனருக்கு உளவுத்துறை எச்சரித்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்களுக்குள் இந்த தாக்குதல் நடைபெறும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது” என்றார்.

இதையடுத்து டெல்லியில் உள்ள அனைத்து உதவி போலீஸ் கமிஷனர்களுக்கும் அத்வால் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, நகரில் உள்ள அனைத்து இன்டெர் நெட் மையங்களிலும் வாடிக்கையாளர்களின் விவரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவர்களது `கம்ப்யூட்டர் லாக் கோடு’ குறித்த விபரங்களையும் சேகரிக்குமாறு கூறப்பட்டுள்ளது. சமீப காலமாக இன்டெர் நெட் மூலமாகவே தீவிரவாதிகள் தகவல் பரிமாற்றம் செய்து வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தவிர மார்க்கெட் பகுதிகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் ரெயில் மற்றும் பஸ் நிலையங்கள் போன்ற மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. வெடிகுண்டு செயலிழக்க செய்யும் படையினர், அதிரடி படையினர், மோப்ப நாய்கள் மற்றும் பல்வேறு சிறப்பு பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

டெல்லிக்குள் நுழையும் அனைத்து எல்லைகளிலும் கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஓட்டல்களில் தங்கி இருப்பவர்கள் மற்றும் வாகன நிறுத்தங்களில் இருக்கும் வாகனங்கள் குறித்த முழு விவரங்களையும் பட்டியல் போட்டு வைத்து இருக்குமாறு ஓட்டல்களின் உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். – செய்தி.

நாட்டில் என்ன நடக்கின்றது என்பதே புரியவில்லை. நந்திகிராமும், குஜராத்தும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கும் வேளையில் இன்னும் இரு வாரத்தில் குண்டு வெடிக்கும் ஆபத்தாம்.

இந்தியப் பாராளுமன்றத் தாக்குதல் நடப்பதற்கு முன்னர் எல்.கெ.அத்வானி அவர்களும் இதே போன்றதொரு அறிக்கை தான் விடுத்திருந்தார். அவர் குறிப்பிட்ட நாட்களுக்குள் பாராளுமன்றத்தின் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு, தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து  தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதுவரை அத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்த முழுமையான தகவல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. முன்னரே ஞானக்கண் கொண்டு சம்பவத்தைக் குறித்து முன்னறிவிப்புச் செய்த தேசப்பற்றாளர் எல்.கே.அத்வானி இப்பொழுதும் ஹாயாகச் சுற்றி திரிகிறார்.

இப்பொழுது அதே போன்ற ஓர் முன்னறிவிப்பு உளவுத்துறையிடமிருந்து.

குறிப்பிடுவது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கட்டும். அவ்வாறு நடைபெற்றால்……?

இந்தியா, செய்திகள் இல் பதிவிடப்பட்டது . 1 Comment »

போட்டி – குஷ்பு, பாட்டீல், லெஸ்பியன் ஜோடி!

  pratibha.jpg

kushboo.jpglesbian1.jpg

மேற்கண்ட இம்மூன்று படங்களுக்கிடையில் ஓர் ஒற்றுமை உள்ளது.

சித்திரம் சொல்லும் செய்தி என்ன?

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

சிந்தனைகள், போட்டிகள் இல் பதிவிடப்பட்டது . 5 Comments »

திருமணத்திற்கு முன் பாதுகாப்பான செக்ஸே சிறந்தவழி – குஷ்பு!

கடந்த தினம் எப்.ஐ.சி.சி. நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார் குஷ்பு.  

அந்த நிகழ்ச்சியில் பேசுகையில், “தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே கற்பு குறித்த விவகாரத்தில் தன்னைக் கைவிட்டு விட்டன, அநீதி இழைத்து விட்டன” என்று கூறியுள்ளார் குஷ்பு.

 

தொடர்ந்து, “நான் சட்டத்திற்குப் புறம்பாக எதையும் சொல்லி விடவில்லை. உண்மையில், பாதுகாப்பான செக்ஸ் என்ற விஷயத்தில் அரசின் கொள்கையைத்தான் நான் கூறினேன்.

 

ஒவ்வொரு பெண்ணும், பாதுகாப்பான செக்ஸை மேற்கொள்ள வேண்டும், ஆணுறைகளை, பெண்ணுறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றுதான் நான் சொன்னேன்.

 

கல்யாணத்திற்கு முன்பு ஒரு பெண் உடலுறவு வைத்துக் கொண்டால் கர்ப்பமடையும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்க ஆணுறைகளை பயன்படுத்துவது நல்லது என்றுதான் நான் சொன்னேன். அப்படிச் செய்யாமல் பாதுகாப்பாற்ற முறையில் உடலுறவு வைத்துக் கொண்டால் அந்தப் பெண்ணுக்கு மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினருக்கும் கூட பல பிரச்சினைகள் ஏற்படும் என்பதைத்தான் நான் எடுத்துரைத்தேன்.

kushboo.jpg

 

இப்படிப்பட்ட பிரச்சினைகளைத் தவிர்க்க பாதுகாப்பான செக்ஸே சிறந்த வழி என்றுதான் கூறினேன். இதில் என்ன தவறு இருக்கிறது. ஆனால் பல அரசியல் கட்சிகள் இந்த விஷயத்தில் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி போராட்டங்கள் நடத்தின.

 

குறிப்பாக பாமகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் எனக்கு எதிராக என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாம் செய்து விட்டன.

 

நான் அளித்த பேட்டியில் கூறிய கருத்துக்கள் அனைத்துமே மத்திய அரசின் கருத்துக்கள்தான். அதைத்தான் நான் பிரதிபலித்தேன். இதற்காக மத்திய அரசு மீது இந்த கட்சிகளால் வழக்கு போட முடியுமா? நான் ஒரு பெண் என்பதால் இந்தக் கட்சிகள் என்னைக் குறி வைத்து நடந்து கொண்டன” என்று பேசினார் குஷ்பு.

 

மேலும் பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் தன் மீது 24 வழக்குகளை போட்டதாகவும் குஷ்பு குற்றம் சாட்டினார்.

செய்திகள், தமிழகம் இல் பதிவிடப்பட்டது . 5 Comments »

கருணாவின் அந்தரங்கம் 4.

தலைவரின் கட்டளையை ஏற்க மறுத்த கருணா வன்னி சென்றால் தனது உயிருக்கு ஆபத்து நேரும் என்பதை நன்கு அறிந்திருந்தார். இப்படியான ஒரு நெருக்கடியைச் சந்தித்த கருணா மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜன் சத்தியமூர்த்தியுடன் பிரச்சினை குறித்து ஆலோசிக்கின்றார். ராஜன் சத்தியமூர்த்தியோ, “உனது கறையை நீக்க பிரதேசவாதத்தை கிழப்பு(எழுப்பு). அதன்மூலம் முரண்பாட்டைத் தோற்றுவிப்பதே சரியான தீர்வு” என வலியுறுத்துகிறார். பிரதேச வாதத்தை முன்வைத்து கருணா விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிச் செல்வதாக ஊடகங்களுக்கு அறிவிக்கின்றார். கிழக்கு மாகாண போராளிகள், தளபதிகள், பொறுப்பாளர்கள், கடும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததினால் கருணாவின் துரோகச் செயலை உடனே அறிந்து கொள்ள வாய்ப்பே இருக்கவில்லை.

போராளிகள் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சமயத்தைப் பாவித்து போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போராளிகள் வைத்திருந்த தொலைபேசிகள் மற்றும் வானொலி என்பன கருணாவினால் வாங்கப்பட்டன. போராளிகளுக்கு வெளித் தொடர்பு இருக்கவில்லை; வெளியுலகமும் தெரியவில்லை.

எல்லோரும் பயிற்சியில் முக்கிய கவனம் செலுத்தியிருந்தனர். பயிற்சி முகாமுக்கு திடீரென வருகை தந்த கருணா போராளிகளை கலந்துரையாடலுக்காக அழைக்கின்றார். “தேசியத் தலைவர் நேரடியாக தென்தமிழீழத்தை வழிநடத்துவதாகவும், எம்மை விடுதலைப் புலிகளின் ஏனைய கட்டமைப்புக்களுக்கு ஊடாக செயற்படாமல் தனது நேரடி் கண்காணிப்பில் செயற்படுமாறு தலைவர் பணித்துள்ளார்” என போராளிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு கருணா தெரியப்படுத்துகிறார்.

போராளிகளோ கருணாவின் கூற்றை சந்தேகத்துடன் நோக்குகின்றனர். கருணாவின் விசுவாசிகளாக இருந்து வந்த போராளிகளுக்கு மட்டுமே கருணாவின் பிரிவினை தெரிந்திருந்தது. போராளிகள் பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்ற வேளை கருணா தன்னை மிக விரைவாக பலப்படுத்துகின்றார்.

அமைப்பிலிருந்து கலைக்கப்பட்டவர்களுக்கும் தேசத்துரோகத்தில் கைதிகளாக அடைக்கப்பட்டவர்களுக்கும் மீள்வாழ்வு தருவதாகவும், தன்னுடன் சேர்ந்து இயங்குமாறும் கருணாவால் ஆசைகாட்டி எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மரணத்தை ஏற்க மறுத்த இவர்கள் கருணாவுடன் இணைகின்றனர். அதுமாத்திரமல்ல ஜெயசிக்குறு சண்டையில் களத்தில் பணி ஆற்றிய தளபதிகள் சிலர் கருணாவின் சதிவலையில் அகப்படுகின்றனர்.

இவர்கள் அனைவரது பலத்தை நம்பி கருணா விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். பிரதேசவாத கருத்துக்களை முன்வைத்தார். தமீழத்திலும் உலகப்பரப்பிலும் கருணாவின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. ஊடகங்கள் கை ஒன்று கால் ஒன்றாக உருப்பெருக்கி தமது கருத்துக்களை வெளிப்படுத்தின.

புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் இது உண்மையா? நம்புவதா? வேண்டாமா? என்ற பல்வேறு கேள்விக் கணையுடன் எல்லோருமே குழம்பிப் போயினர். கிழக்கு மாகாண மக்களும் எதை செய்வது என்ன செய்வது என்பது தெரியாமல் திசைமாறியபடியே குழம்பினர். இதற்கு் விதிவிலக்காக கிழக்கு மாகாண போராளிகள் மத்தியில் கருணாவின் அறிவிப்பு தெரியவரவில்லை. போராளிகள் பயிற்சியில் கூடிய கவனம் செலுத்தினர்.

வானொலிகளோ, தொலைபேசிகளோ, தொலைத் தொடர்பு சாதனங்களோ, மக்கள் தொடர்புகளோ, ஊடக தொடர்பு சாதனங்களோ எதுவுவே இல்லாத நிலையில் கருணாவின் துரோகத்தனத்தை போராளிகளோ பொறுப்பாளர்களோ அறிய வாய்ப்பே இருக்கவில்லை.

ஒரு சில நாட்களில் தளபதிகள், பொறுப்பாளர்கள் மத்தியில் கருணாவின் பிரிவினை பற்றிய கருத்து தெரியவருகிறது. பொறுப்பாளர்களும் தளபதிகளும் என்ன செய்வதென்று அறியாமல் தடுமாறிய நிலையில் இருக்கின்றனர்.

(தொடரும்)

படித்தது

துரோகம், புலிகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

கருணாவின் அந்தரங்கம் – 3.

போராளி கம்சனோ கருணா நினைத்தது போல் கொலை செய்யபட்டுவிட்டார். கருணாவுக்கு அத்திட்டத்தில் வெற்றி. கம்சனின் கொலையை இயற்கைச் சாவாக புலிகள் அமைப்புக்கு தெரியப்படுத்தியதிலும் கருணாவுக்கு வெற்றியே.போராளி கம்சனின் சாவும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட போராளிகளுக்கான போர்ப் பயிற்சி நடந்த காலமும் ஒன்றே. சிறீலங்கா அரசுடன் மீண்டும் 4ம் கட்ட ஈழப்போர் தொடங்கும் அரசியல் சூழலாக இருந்த காலமும் அதுவே. இதற்காக கிழக்கு மாகாண போராளிகள் அனைவருக்கும் விசேட போர்ப் பயிற்சிகள் வழங்குவதற்காக தளபதிகள்,பொறுப்பாளர்,போராளிகள், முகாம்களில் தங்கியிருந்து வெளியே செல்லாது பயிற்சிகளில் ஈடுபட்ட காலம். இத்தக் காலத்தையே கருணா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.போராளி கம்சனின் சாவை இயற்கைச் சாவாக மருத்துவப் போராளி ஊடாக ஏனைய போராளிகள் மத்தியில் பரப்புரை செய்தார்(பரப்பினார்). விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்திற்கும் கம்சனின் சாவு இயற்கைச் சாவாக அறிவிக்கப்படுகிறது. இதிலும் கருணா கணிசமான வெற்றியை தனது பக்கம் சேர்த்துக் கொண்டார்.

கம்சனின் இறுதி வீரவணகத்திற்காக கிழக்கு மாகாண தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் அனைவருமாக மாவீரர் துயிலுமில்லத்தில் காத்திருந்தார்கள். கருணாவோ இறுதி வீரவணக்திற்காக துயிலுமில்லம் வருகை தருகிறார். துயிலுமில்லம் வந்த கருணா அங்கே தனிமையைத் தேடுகிறார். ஏனைய பொறுப்பாளர்கள், தளபதிகள், போராளிகளுடன் சுமூகமாகப் பழகும் கருணா அன்று எதனையோ இழந்து பறிகொடுத்தது போல் காணப்பட்டார்.

தளபதிகள், பொறுப்பாளர்கள், மற்றும் போராளிகளுடன் கதைக்காமல், ஓராமாக நின்று, தனிமையில் இருந்து, அழுதவண்ணம் இருந்தார். என்னடா…? கிழக்கு மாகாணத்தில் எத்தனையோ போராளிகள் இந்த தேச விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த போதும் அப்போராளிகளுக்காக ஒரு சொட்டு் கண்ணீர் கூட வடிக்காத கருணா கம்சனின் சாவுக்கு கண்ணீர் வடிக்கிறாரே என அவருடன் நீண்ட காலமாக இருந்து வாழ்ந்த மூத்த போராளிகள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாது கருணாவின் சதி முயற்சியை விடுதலைப் போராளிகளால் உணரக்கூடிய திருப்புமுனைச் சம்பவமாக அது அமைந்தது.

இதற்கு இடையில் வன்னி சென்று தேசியத் தலைவருக்கு கருணாவின் 35 இலட்சம் இலங்கை ரூபா நிதி மோசடி செய்த விடயத்தை தெரியப்படுத்திவிட்டு மேலதிக தகவல்களை திரட்டி உறுதிப்படுத்த மட்டக்களப்பு மாவட்டம் திரும்பினார் மட்டக்களப்பு நிதிப் பொறுப்பாளர்.

மட்டக்களப்பு சென்ற நிதிப் பொறுபாளருக்கு கம்சனின் சாவும் கருணா மீது இருந்து சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது.

இதனை அடுத்து தமிழீழ தேசியத் தலைவரால் கருணாவுக்கு செல் மூலம் தகவல் அனுப்பப்படுகிறது….. (அம்பலம் தொடரும்)

படித்தது

துரோகம், புலிகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

கருணாவின் அந்தரங்கம் – 2.

தமிழீழ தேசியத் தலைவரிடம் கருணா அம்மானின் நிதி மோசடி தொடர்பான விடயங்களை விளக்கமாக தெரிவித்தார் அந்த நிதித்துறைப் போராளி. தமிழீழ தேசியத் தலைவரால் அந்த நிதித்துறைப் போராளி கருணாவின் நிதி மோசடி தொடர்பாக மட்டக்களப்பு தேனகம் சென்று மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்துமாறு பணிக்கப்படுகிறார். இதற்கிடையில் தமிழீழ தேசியத் தலைவர் கருணாவுடன் தொலைத் தொடர்பு கருவி மூலம் தொடர்பை ஏற்படுத்தி கருணா உன்மீது ஒரு சில முறைபாடுகள் வந்துள்ளன; அதை தெளிவுபடுத்த வன்னி வருமாறு அன்பாக அழைத்தார். நிதி மோசடி தொடர்பான விடயங்கள் ஏதோ ஒரு வகையில் தமிழீழ தேசியத் தலைவருக்கு தெரிந்து விட்டதை அறிந்த கருணா, வருவதாக அறிவித்து விட்டு அக்காலப் பகுதியை மட்டக்களப்பில் தன்னை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

இத்தருணம் கருணாவின் நிதிமோசடி தொடர்பான விடயம் அறிந்த சாட்சியாக கம்சன் என்ற போராளியே இருந்தான். அந்த சாட்சியை எப்படியும் கொல்லவேண்டும் என்று கருணா பலமுயற்சிகளை மேற்கொண்டிருந்த சமயம் கம்சன் என்ற போராளிக்கு மலேரியா காய்ச்சல் வந்து விட்டது. வழமையாக காய்ச்சல் மற்றும் நோய்கள் வரும்போது விடுதலைப் புலிகளின் மெடிக்ஸில் தங்கி நின்று வருத்தத்தை(நோயை)க் குணப்படுத்துவது வழக்கம்.

அந்த வகையில் கம்சன் என்ற போராளியும் விடுதலைப் புலிகளின் மருத்துவ மனைக்கு அனுப்பப்படுகிறார். கம்சன் தங்கியிருந்த மருத்துவ மனையில் பணியாற்றிய மருத்துவர்களில் ஒருவர் கருணாவின் அன்புக்குரிய தீவிர விசுவாசி. அந்த மருத்துவ போராளியை கருணா அணுகி அப்போராளியை கொல்லுவதற்கான சதித்திட்டத்தை போடுகிறார்.

இந்த கொலைச் சதித்திட்டத்தை மிக இரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்றும், இந்த விடயம் வெளியில் தெரியும் பட்சத்தில் மருத்துவப் போராளியை கொன்றுவிடுவதாகவும் கருணா விரட்டியுள்ளார். இதற்கமையவே இருவருமாகச் சேர்ந்து கம்சன் என்ற போராளியை கொல்லுவதற்கான சதித்திட்டம் தீட்டப்படுகிறது.

நிதித்துறைப் போராளி தேசியத் தலைவரிடம் தகவலைத் தெரிவித்து விட்டு வருவார் என எதிர்பார்த்திருந்த கம்சனுக்கு சாவு மிக அருகில் வந்துகொண்டிருந்தது.

கருணாவும் அந்த மருத்துவ போராளியுமாக இணைந்து மலேரியா நோயில் பீடிக்கப்பட்ட கம்சனுக்கு மருத்துடன் மருந்தாக விச ஊசியை ஏற்றி கொல்வதே இருவருடைய கொலைத் திட்டமாகும். இத்திட்டத்தின் அடிப்படையில் மருத்துவப் போராளி கம்சனுக்கு விச ஊசியை ஏற்றி கொலை செய்கிறான்.

கருணாவுக்கு சற்று நின்மதி(எதிராக) இருந்த சாட்சியை ஒருவாறு கொலை செய்விட்டாச்சு(செய்தாகி விட்டது). அடுத்து கொலை செய்யப்பட்ட போராளியை எப்படி இயற்கை சாவாக மாற்றுவது; மற்றவர்களை எப்படி நம்ப வைப்பது என கருணா சிந்திக்கிறார்.

(தொடரும்)

படித்தது

துரோகம், புலிகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

கருணாவின் அந்தரங்கம் – 1.

திரு.கருணா அம்மான் அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்றதோடு தமிழ் தேசியத்திற்கு பாரிய துரோகத்தை செய்து விட்டு சிறீலங்கா இராணுவத்தினரின் கைக்கூலியாக மாறி இன்று நடைபிணமாக மரணத்தின் விழிம்பில் நின்று விம்மி விம்மி அழுத வண்ணம் இருக்கின்றார்.தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த கருணா அம்மான் விடுதலைப் புலிகள் அமைப்பில் கட்டளைத் தளபதியாக இருந்த வேளையில் சமாதான காலத்தை அடுத்து வெளிநாடுகளுக்கான பயணங்களையும் மேற்கொண்டிருந்தார்.வெளிநாடுகளுக்கான பயணத்தின் போது அவருக்கு இருந்த தாய் மண் மீதான பற்று படிப்படியாக குறைந்து காலப் போக்கில் பெண் ஆசை, பொன் ஆசை மீது அளவு கடந்த பற்றும் மரியாதையும் வளரத்தொடங்கியது.

மனைவி மீது அளவு கடந்த பற்று கொண்டதால் விடுதலைக்காக கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட தொகை இலட்சம் ரூபாக்களை தனது மனைவியின் செலவுக்காக கொடுத்திருந்தார். குறிப்பாக மனைவி மலேசியா செல்ல புறப்பட்ட சமயம் பயுறோ வாகனத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு செல்கின்றார். அதே இடத்திற்கு கருணாவோடு இரு போராளிகளும் செல்கின்றனர். குறிப்பிட்ட இடத்தில் மனைவியின் பயுறோ வாகனம் தரித்து நிற்க அதே இடத்தில் கருணாவின் பயுறோ வாகனமும் படு வேகமாக வந்து தரித்தது.

உடனடியாக பயுறோ வாகனங்களின் பின்புற கதவுகள் திறக்கபட்டன. அந்த இடைவெளியில் ஒரு சூட்கேஸ் கருணாவால் திறந்து பார்க்கபட்டு தனது ஆசை மனைவிக்கு அந்த பணப் பெட்டியை தானம் செய்கிறார். அங்கே தான் கருணா அம்மான் தமிழர் தாயகத்திற்கும், தமிழர் தேசியத்திற்கும், தேசியத் தலைவனுக்கும், தமிழ் மக்களுக்குமான முதலாவது துரோகத்தை இழைக்கிறான். சூட்கேசினை கருணா அம்மான் திறந்து பார்க்கும் போது கம்சன் என்ற போராளி சூக்கேசினுள் இருந்த குறிப்பிட்ட இலட்சம் ரூபாக்களை பார்த்து விட்டான். கருணாவின் துரோகச் செயலை அவனது மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. கம்சன் உடனடியாக கருணா அம்மானின் வாகனச் சாரதிக்கு இரகசியமாக தகவலைத் தெரிவிக்கின்றான்.

பாவம் கம்சன் வாகனச் சாரதியோ கருணா அம்மானின் நெருங்கிய விசுவாசி. இதனை கம்சன் எந்தவொரு காலத்திலும் அறிந்திருக்கவில்லை. வாகனச்சாரதியோ விசயத்தை காதும் காதுமாக கருணா அம்மானிடம் தெரியப்படுத்தினான்.விசயம் அறிந்த கருணா அம்மான் இந்த விசயம் இயக்கத்திற்கு தெரிந்தால் அமைப்பில் சுடப்போகிறார்களே என்று அஞ்சி மண்டை எல்லாம் குழம்பிப் போய், என்ன செய்வது என்று தெரியாத நிலையில் நிலை தடுமாறி நின்ற சமயம் கம்சன் என்ற போராளி தனது நிதிப் பொறுப்பாளரிடம் கருணா அம்மானின் நிதி மோசடியை விரிவாகத் தெரிவித்தான். நிதித்துறைப் போராளியோ தகவலை எடுத்துகொண்டு வன்னி சென்று தேசியத் தலைவரிடம் தகவலைத் தெரிவிக்கின்றான்.

(தொடரும்)

படித்தது.

துரோகம், புலிகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »