திருமணத்திற்கு முன் பாதுகாப்பான செக்ஸே சிறந்தவழி – குஷ்பு!

கடந்த தினம் எப்.ஐ.சி.சி. நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார் குஷ்பு.  

அந்த நிகழ்ச்சியில் பேசுகையில், “தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே கற்பு குறித்த விவகாரத்தில் தன்னைக் கைவிட்டு விட்டன, அநீதி இழைத்து விட்டன” என்று கூறியுள்ளார் குஷ்பு.

 

தொடர்ந்து, “நான் சட்டத்திற்குப் புறம்பாக எதையும் சொல்லி விடவில்லை. உண்மையில், பாதுகாப்பான செக்ஸ் என்ற விஷயத்தில் அரசின் கொள்கையைத்தான் நான் கூறினேன்.

 

ஒவ்வொரு பெண்ணும், பாதுகாப்பான செக்ஸை மேற்கொள்ள வேண்டும், ஆணுறைகளை, பெண்ணுறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றுதான் நான் சொன்னேன்.

 

கல்யாணத்திற்கு முன்பு ஒரு பெண் உடலுறவு வைத்துக் கொண்டால் கர்ப்பமடையும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்க ஆணுறைகளை பயன்படுத்துவது நல்லது என்றுதான் நான் சொன்னேன். அப்படிச் செய்யாமல் பாதுகாப்பாற்ற முறையில் உடலுறவு வைத்துக் கொண்டால் அந்தப் பெண்ணுக்கு மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினருக்கும் கூட பல பிரச்சினைகள் ஏற்படும் என்பதைத்தான் நான் எடுத்துரைத்தேன்.

kushboo.jpg

 

இப்படிப்பட்ட பிரச்சினைகளைத் தவிர்க்க பாதுகாப்பான செக்ஸே சிறந்த வழி என்றுதான் கூறினேன். இதில் என்ன தவறு இருக்கிறது. ஆனால் பல அரசியல் கட்சிகள் இந்த விஷயத்தில் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி போராட்டங்கள் நடத்தின.

 

குறிப்பாக பாமகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் எனக்கு எதிராக என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாம் செய்து விட்டன.

 

நான் அளித்த பேட்டியில் கூறிய கருத்துக்கள் அனைத்துமே மத்திய அரசின் கருத்துக்கள்தான். அதைத்தான் நான் பிரதிபலித்தேன். இதற்காக மத்திய அரசு மீது இந்த கட்சிகளால் வழக்கு போட முடியுமா? நான் ஒரு பெண் என்பதால் இந்தக் கட்சிகள் என்னைக் குறி வைத்து நடந்து கொண்டன” என்று பேசினார் குஷ்பு.

 

மேலும் பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் தன் மீது 24 வழக்குகளை போட்டதாகவும் குஷ்பு குற்றம் சாட்டினார்.

செய்திகள், தமிழகம் இல் பதிவிடப்பட்டது . 5 Comments »

கருணாவின் அந்தரங்கம் 4.

தலைவரின் கட்டளையை ஏற்க மறுத்த கருணா வன்னி சென்றால் தனது உயிருக்கு ஆபத்து நேரும் என்பதை நன்கு அறிந்திருந்தார். இப்படியான ஒரு நெருக்கடியைச் சந்தித்த கருணா மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜன் சத்தியமூர்த்தியுடன் பிரச்சினை குறித்து ஆலோசிக்கின்றார். ராஜன் சத்தியமூர்த்தியோ, “உனது கறையை நீக்க பிரதேசவாதத்தை கிழப்பு(எழுப்பு). அதன்மூலம் முரண்பாட்டைத் தோற்றுவிப்பதே சரியான தீர்வு” என வலியுறுத்துகிறார். பிரதேச வாதத்தை முன்வைத்து கருணா விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிச் செல்வதாக ஊடகங்களுக்கு அறிவிக்கின்றார். கிழக்கு மாகாண போராளிகள், தளபதிகள், பொறுப்பாளர்கள், கடும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததினால் கருணாவின் துரோகச் செயலை உடனே அறிந்து கொள்ள வாய்ப்பே இருக்கவில்லை.

போராளிகள் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சமயத்தைப் பாவித்து போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போராளிகள் வைத்திருந்த தொலைபேசிகள் மற்றும் வானொலி என்பன கருணாவினால் வாங்கப்பட்டன. போராளிகளுக்கு வெளித் தொடர்பு இருக்கவில்லை; வெளியுலகமும் தெரியவில்லை.

எல்லோரும் பயிற்சியில் முக்கிய கவனம் செலுத்தியிருந்தனர். பயிற்சி முகாமுக்கு திடீரென வருகை தந்த கருணா போராளிகளை கலந்துரையாடலுக்காக அழைக்கின்றார். “தேசியத் தலைவர் நேரடியாக தென்தமிழீழத்தை வழிநடத்துவதாகவும், எம்மை விடுதலைப் புலிகளின் ஏனைய கட்டமைப்புக்களுக்கு ஊடாக செயற்படாமல் தனது நேரடி் கண்காணிப்பில் செயற்படுமாறு தலைவர் பணித்துள்ளார்” என போராளிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு கருணா தெரியப்படுத்துகிறார்.

போராளிகளோ கருணாவின் கூற்றை சந்தேகத்துடன் நோக்குகின்றனர். கருணாவின் விசுவாசிகளாக இருந்து வந்த போராளிகளுக்கு மட்டுமே கருணாவின் பிரிவினை தெரிந்திருந்தது. போராளிகள் பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்ற வேளை கருணா தன்னை மிக விரைவாக பலப்படுத்துகின்றார்.

அமைப்பிலிருந்து கலைக்கப்பட்டவர்களுக்கும் தேசத்துரோகத்தில் கைதிகளாக அடைக்கப்பட்டவர்களுக்கும் மீள்வாழ்வு தருவதாகவும், தன்னுடன் சேர்ந்து இயங்குமாறும் கருணாவால் ஆசைகாட்டி எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மரணத்தை ஏற்க மறுத்த இவர்கள் கருணாவுடன் இணைகின்றனர். அதுமாத்திரமல்ல ஜெயசிக்குறு சண்டையில் களத்தில் பணி ஆற்றிய தளபதிகள் சிலர் கருணாவின் சதிவலையில் அகப்படுகின்றனர்.

இவர்கள் அனைவரது பலத்தை நம்பி கருணா விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். பிரதேசவாத கருத்துக்களை முன்வைத்தார். தமீழத்திலும் உலகப்பரப்பிலும் கருணாவின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. ஊடகங்கள் கை ஒன்று கால் ஒன்றாக உருப்பெருக்கி தமது கருத்துக்களை வெளிப்படுத்தின.

புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் இது உண்மையா? நம்புவதா? வேண்டாமா? என்ற பல்வேறு கேள்விக் கணையுடன் எல்லோருமே குழம்பிப் போயினர். கிழக்கு மாகாண மக்களும் எதை செய்வது என்ன செய்வது என்பது தெரியாமல் திசைமாறியபடியே குழம்பினர். இதற்கு் விதிவிலக்காக கிழக்கு மாகாண போராளிகள் மத்தியில் கருணாவின் அறிவிப்பு தெரியவரவில்லை. போராளிகள் பயிற்சியில் கூடிய கவனம் செலுத்தினர்.

வானொலிகளோ, தொலைபேசிகளோ, தொலைத் தொடர்பு சாதனங்களோ, மக்கள் தொடர்புகளோ, ஊடக தொடர்பு சாதனங்களோ எதுவுவே இல்லாத நிலையில் கருணாவின் துரோகத்தனத்தை போராளிகளோ பொறுப்பாளர்களோ அறிய வாய்ப்பே இருக்கவில்லை.

ஒரு சில நாட்களில் தளபதிகள், பொறுப்பாளர்கள் மத்தியில் கருணாவின் பிரிவினை பற்றிய கருத்து தெரியவருகிறது. பொறுப்பாளர்களும் தளபதிகளும் என்ன செய்வதென்று அறியாமல் தடுமாறிய நிலையில் இருக்கின்றனர்.

(தொடரும்)

படித்தது

துரோகம், புலிகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »