கருணாவின் அந்தரங்கம் – 3.

போராளி கம்சனோ கருணா நினைத்தது போல் கொலை செய்யபட்டுவிட்டார். கருணாவுக்கு அத்திட்டத்தில் வெற்றி. கம்சனின் கொலையை இயற்கைச் சாவாக புலிகள் அமைப்புக்கு தெரியப்படுத்தியதிலும் கருணாவுக்கு வெற்றியே.போராளி கம்சனின் சாவும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட போராளிகளுக்கான போர்ப் பயிற்சி நடந்த காலமும் ஒன்றே. சிறீலங்கா அரசுடன் மீண்டும் 4ம் கட்ட ஈழப்போர் தொடங்கும் அரசியல் சூழலாக இருந்த காலமும் அதுவே. இதற்காக கிழக்கு மாகாண போராளிகள் அனைவருக்கும் விசேட போர்ப் பயிற்சிகள் வழங்குவதற்காக தளபதிகள்,பொறுப்பாளர்,போராளிகள், முகாம்களில் தங்கியிருந்து வெளியே செல்லாது பயிற்சிகளில் ஈடுபட்ட காலம். இத்தக் காலத்தையே கருணா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.போராளி கம்சனின் சாவை இயற்கைச் சாவாக மருத்துவப் போராளி ஊடாக ஏனைய போராளிகள் மத்தியில் பரப்புரை செய்தார்(பரப்பினார்). விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்திற்கும் கம்சனின் சாவு இயற்கைச் சாவாக அறிவிக்கப்படுகிறது. இதிலும் கருணா கணிசமான வெற்றியை தனது பக்கம் சேர்த்துக் கொண்டார்.

கம்சனின் இறுதி வீரவணகத்திற்காக கிழக்கு மாகாண தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் அனைவருமாக மாவீரர் துயிலுமில்லத்தில் காத்திருந்தார்கள். கருணாவோ இறுதி வீரவணக்திற்காக துயிலுமில்லம் வருகை தருகிறார். துயிலுமில்லம் வந்த கருணா அங்கே தனிமையைத் தேடுகிறார். ஏனைய பொறுப்பாளர்கள், தளபதிகள், போராளிகளுடன் சுமூகமாகப் பழகும் கருணா அன்று எதனையோ இழந்து பறிகொடுத்தது போல் காணப்பட்டார்.

தளபதிகள், பொறுப்பாளர்கள், மற்றும் போராளிகளுடன் கதைக்காமல், ஓராமாக நின்று, தனிமையில் இருந்து, அழுதவண்ணம் இருந்தார். என்னடா…? கிழக்கு மாகாணத்தில் எத்தனையோ போராளிகள் இந்த தேச விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த போதும் அப்போராளிகளுக்காக ஒரு சொட்டு் கண்ணீர் கூட வடிக்காத கருணா கம்சனின் சாவுக்கு கண்ணீர் வடிக்கிறாரே என அவருடன் நீண்ட காலமாக இருந்து வாழ்ந்த மூத்த போராளிகள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாது கருணாவின் சதி முயற்சியை விடுதலைப் போராளிகளால் உணரக்கூடிய திருப்புமுனைச் சம்பவமாக அது அமைந்தது.

இதற்கு இடையில் வன்னி சென்று தேசியத் தலைவருக்கு கருணாவின் 35 இலட்சம் இலங்கை ரூபா நிதி மோசடி செய்த விடயத்தை தெரியப்படுத்திவிட்டு மேலதிக தகவல்களை திரட்டி உறுதிப்படுத்த மட்டக்களப்பு மாவட்டம் திரும்பினார் மட்டக்களப்பு நிதிப் பொறுப்பாளர்.

மட்டக்களப்பு சென்ற நிதிப் பொறுபாளருக்கு கம்சனின் சாவும் கருணா மீது இருந்து சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது.

இதனை அடுத்து தமிழீழ தேசியத் தலைவரால் கருணாவுக்கு செல் மூலம் தகவல் அனுப்பப்படுகிறது….. (அம்பலம் தொடரும்)

படித்தது

துரோகம், புலிகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

கருணாவின் அந்தரங்கம் – 2.

தமிழீழ தேசியத் தலைவரிடம் கருணா அம்மானின் நிதி மோசடி தொடர்பான விடயங்களை விளக்கமாக தெரிவித்தார் அந்த நிதித்துறைப் போராளி. தமிழீழ தேசியத் தலைவரால் அந்த நிதித்துறைப் போராளி கருணாவின் நிதி மோசடி தொடர்பாக மட்டக்களப்பு தேனகம் சென்று மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்துமாறு பணிக்கப்படுகிறார். இதற்கிடையில் தமிழீழ தேசியத் தலைவர் கருணாவுடன் தொலைத் தொடர்பு கருவி மூலம் தொடர்பை ஏற்படுத்தி கருணா உன்மீது ஒரு சில முறைபாடுகள் வந்துள்ளன; அதை தெளிவுபடுத்த வன்னி வருமாறு அன்பாக அழைத்தார். நிதி மோசடி தொடர்பான விடயங்கள் ஏதோ ஒரு வகையில் தமிழீழ தேசியத் தலைவருக்கு தெரிந்து விட்டதை அறிந்த கருணா, வருவதாக அறிவித்து விட்டு அக்காலப் பகுதியை மட்டக்களப்பில் தன்னை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

இத்தருணம் கருணாவின் நிதிமோசடி தொடர்பான விடயம் அறிந்த சாட்சியாக கம்சன் என்ற போராளியே இருந்தான். அந்த சாட்சியை எப்படியும் கொல்லவேண்டும் என்று கருணா பலமுயற்சிகளை மேற்கொண்டிருந்த சமயம் கம்சன் என்ற போராளிக்கு மலேரியா காய்ச்சல் வந்து விட்டது. வழமையாக காய்ச்சல் மற்றும் நோய்கள் வரும்போது விடுதலைப் புலிகளின் மெடிக்ஸில் தங்கி நின்று வருத்தத்தை(நோயை)க் குணப்படுத்துவது வழக்கம்.

அந்த வகையில் கம்சன் என்ற போராளியும் விடுதலைப் புலிகளின் மருத்துவ மனைக்கு அனுப்பப்படுகிறார். கம்சன் தங்கியிருந்த மருத்துவ மனையில் பணியாற்றிய மருத்துவர்களில் ஒருவர் கருணாவின் அன்புக்குரிய தீவிர விசுவாசி. அந்த மருத்துவ போராளியை கருணா அணுகி அப்போராளியை கொல்லுவதற்கான சதித்திட்டத்தை போடுகிறார்.

இந்த கொலைச் சதித்திட்டத்தை மிக இரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்றும், இந்த விடயம் வெளியில் தெரியும் பட்சத்தில் மருத்துவப் போராளியை கொன்றுவிடுவதாகவும் கருணா விரட்டியுள்ளார். இதற்கமையவே இருவருமாகச் சேர்ந்து கம்சன் என்ற போராளியை கொல்லுவதற்கான சதித்திட்டம் தீட்டப்படுகிறது.

நிதித்துறைப் போராளி தேசியத் தலைவரிடம் தகவலைத் தெரிவித்து விட்டு வருவார் என எதிர்பார்த்திருந்த கம்சனுக்கு சாவு மிக அருகில் வந்துகொண்டிருந்தது.

கருணாவும் அந்த மருத்துவ போராளியுமாக இணைந்து மலேரியா நோயில் பீடிக்கப்பட்ட கம்சனுக்கு மருத்துடன் மருந்தாக விச ஊசியை ஏற்றி கொல்வதே இருவருடைய கொலைத் திட்டமாகும். இத்திட்டத்தின் அடிப்படையில் மருத்துவப் போராளி கம்சனுக்கு விச ஊசியை ஏற்றி கொலை செய்கிறான்.

கருணாவுக்கு சற்று நின்மதி(எதிராக) இருந்த சாட்சியை ஒருவாறு கொலை செய்விட்டாச்சு(செய்தாகி விட்டது). அடுத்து கொலை செய்யப்பட்ட போராளியை எப்படி இயற்கை சாவாக மாற்றுவது; மற்றவர்களை எப்படி நம்ப வைப்பது என கருணா சிந்திக்கிறார்.

(தொடரும்)

படித்தது

துரோகம், புலிகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

கருணாவின் அந்தரங்கம் – 1.

திரு.கருணா அம்மான் அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்றதோடு தமிழ் தேசியத்திற்கு பாரிய துரோகத்தை செய்து விட்டு சிறீலங்கா இராணுவத்தினரின் கைக்கூலியாக மாறி இன்று நடைபிணமாக மரணத்தின் விழிம்பில் நின்று விம்மி விம்மி அழுத வண்ணம் இருக்கின்றார்.தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த கருணா அம்மான் விடுதலைப் புலிகள் அமைப்பில் கட்டளைத் தளபதியாக இருந்த வேளையில் சமாதான காலத்தை அடுத்து வெளிநாடுகளுக்கான பயணங்களையும் மேற்கொண்டிருந்தார்.வெளிநாடுகளுக்கான பயணத்தின் போது அவருக்கு இருந்த தாய் மண் மீதான பற்று படிப்படியாக குறைந்து காலப் போக்கில் பெண் ஆசை, பொன் ஆசை மீது அளவு கடந்த பற்றும் மரியாதையும் வளரத்தொடங்கியது.

மனைவி மீது அளவு கடந்த பற்று கொண்டதால் விடுதலைக்காக கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட தொகை இலட்சம் ரூபாக்களை தனது மனைவியின் செலவுக்காக கொடுத்திருந்தார். குறிப்பாக மனைவி மலேசியா செல்ல புறப்பட்ட சமயம் பயுறோ வாகனத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு செல்கின்றார். அதே இடத்திற்கு கருணாவோடு இரு போராளிகளும் செல்கின்றனர். குறிப்பிட்ட இடத்தில் மனைவியின் பயுறோ வாகனம் தரித்து நிற்க அதே இடத்தில் கருணாவின் பயுறோ வாகனமும் படு வேகமாக வந்து தரித்தது.

உடனடியாக பயுறோ வாகனங்களின் பின்புற கதவுகள் திறக்கபட்டன. அந்த இடைவெளியில் ஒரு சூட்கேஸ் கருணாவால் திறந்து பார்க்கபட்டு தனது ஆசை மனைவிக்கு அந்த பணப் பெட்டியை தானம் செய்கிறார். அங்கே தான் கருணா அம்மான் தமிழர் தாயகத்திற்கும், தமிழர் தேசியத்திற்கும், தேசியத் தலைவனுக்கும், தமிழ் மக்களுக்குமான முதலாவது துரோகத்தை இழைக்கிறான். சூட்கேசினை கருணா அம்மான் திறந்து பார்க்கும் போது கம்சன் என்ற போராளி சூக்கேசினுள் இருந்த குறிப்பிட்ட இலட்சம் ரூபாக்களை பார்த்து விட்டான். கருணாவின் துரோகச் செயலை அவனது மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. கம்சன் உடனடியாக கருணா அம்மானின் வாகனச் சாரதிக்கு இரகசியமாக தகவலைத் தெரிவிக்கின்றான்.

பாவம் கம்சன் வாகனச் சாரதியோ கருணா அம்மானின் நெருங்கிய விசுவாசி. இதனை கம்சன் எந்தவொரு காலத்திலும் அறிந்திருக்கவில்லை. வாகனச்சாரதியோ விசயத்தை காதும் காதுமாக கருணா அம்மானிடம் தெரியப்படுத்தினான்.விசயம் அறிந்த கருணா அம்மான் இந்த விசயம் இயக்கத்திற்கு தெரிந்தால் அமைப்பில் சுடப்போகிறார்களே என்று அஞ்சி மண்டை எல்லாம் குழம்பிப் போய், என்ன செய்வது என்று தெரியாத நிலையில் நிலை தடுமாறி நின்ற சமயம் கம்சன் என்ற போராளி தனது நிதிப் பொறுப்பாளரிடம் கருணா அம்மானின் நிதி மோசடியை விரிவாகத் தெரிவித்தான். நிதித்துறைப் போராளியோ தகவலை எடுத்துகொண்டு வன்னி சென்று தேசியத் தலைவரிடம் தகவலைத் தெரிவிக்கின்றான்.

(தொடரும்)

படித்தது.

துரோகம், புலிகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »