ஐதராபாத்தில் மதரசாக்களுக்கு உருது அகாடமி சார்பில் கம்ப்யூட்டர் வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பேசியதாவது:
“முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இது தொடர்பாக எழுந்துள்ள சட்டப்பூர்வமான தடைகளை எதிர்கொண்டு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் இன்னும் 30 நாட்களில் அவசரச் சட்டம் கொண்டுவரப்படும். சிறுபான்மையினர் நலனில் மாநில அரசு மிகவும் அக்கறை கொண்டுள்ளது. மதரசாக்களில் நவீன கல்வி கற்றுத்தர ஏற்பாடு செய்யப்படும்.”
“மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், மாநிலத்தில் தெலுங்கு தேசமும் ஆட்சி செய்தபோது, தீவிரவாத பயிற்சி முகாம்களாக மதரசாக்கள் சித்தரிக்கப்பட்டன. ஆனால், அவை அறிவு மையங்கள் என்று காங்கிரஸ் அரசு கருதுகிறது. மதரசாக்களை நவீனப்படுத்த அரசு எல்லா உதவிகளையும் செய்யும்”. இவ்வாறு ராஜசேகர ரெட்டி பேசினார்.
மறுமொழியொன்றை இடுங்கள்