மும்பை புறநகர் ரயில்களில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி தொடர் குண்டுகள் வெடித்தன. அந்த சம்பவத்தில் 187 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; பலர் படுகாயமடைந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்தவர்களில் பரக் சவந்த் மற்றும் அமித் சிங் என்னும் இருவர் இன்னும் “கோமா’ நிலையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களுடைய குடும்பத்தினரை பா.ஜ.க முன்னாள் தலைவர் அத்வானி நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதன் பிறகு, நிருபர்களிடம் அத்வானி பேசுகையில், “மத்திய அரசு, ரயில்வே துறை மற்றும் மாநில அரசு இணைந்து, குஜராத், கோவை, மும்பை, மாறாடு முதலிய கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி மற்றும் மறுவாழ்வு அளிக்க விரைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இன்னும் பலருக்கு நிவாரண உதவி கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர். இந்த சம்பவம்கள் நடந்து பல 11 மாதங்கள் கடந்தும், வழக்கு விசாரணைகள் முடியாமல் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. அதனால், இவ்வழக்குகளை விரைவாக முடித்து, எங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும்’ என்றார். மேலும், “எங்களால் இடிக்கப்பட்ட இந்தியவரலாற்றுசின்னம் பாபர் மஸ்ஜிதை திரும்ப எழுப்பவும் நாட்டில் அமைதி ஏற்பட ஆர்.எஸ்.எஸ் உட்பட அனைத்து தனியார் மத/இன அமைப்புகளை தடை செய்யவும் மத்திய அரசும் உச்சநீதி மன்றமும் ஆவன செய்ய வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
அடவேற ஒண்ணுமில்லீங்க. அத்வானிஜி தனது கடைசி காலத்தில், உண்மையிலேயே இந்திய நாட்டின் மீது பற்று கொண்டு பேட்டி கொடுத்தால் எப்படி இருக்கும் என நினைத்துப் பார்த்தேன். அவ்வளவு தான்.
மறுமொழியொன்றை இடுங்கள்