“திமுக அரசின் கதை முடியப்போகிறது” – ஜெ.ஜெயலலிதா!

அதிமுக கழக தொண்டர் ஒருவரின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு செல்வி ஜெ.ஜெயலலிதா பேசும் பொழுது தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசின் கதை விரைவில் முடியப்போகிறது என்று கூறினார்.

சென்னையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை இடிக்க அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையில் நடந்த கழக தொண்டரின் மகள் திருமணவிழாவில் கலந்து கொண்டு அவர் பேசும் பொழுது முதல்வருக்கு எதிராக கடுமையான வாசகத்தை பிரயோகித்து சாடவும் செய்தார்.

அவர் அங்கு பேசும் பொழுது, “நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தான் வாழ வேண்டும், தன்னைச் சார்ந்தவர்களும் வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்கள் சமுதாயத்துக்கும் பயனுள்ளவர்களாக இருப்பார்கள்.

திருமண விழாக்களில் நல்ல வார்த்தைகள் பேச வேண்டும். மங்களகரமாகப் பேச வேண்டும். ஆனால் இன்று சூழ்நிலை வேறுவிதமாக உள்ளது. எம்ஜிஆர் 1972ல் நிறுவிய அதிமுக தலைமை அலுவலக கட்டடத்தையே இடிக்க அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதன்மூலம் இந்த அரசின் கதை முடியப்போகிறது. இந்த மகிழ்ச்சியான நேரத்தில் அதுபற்றி அதிகம் பேச விரும்பவில்லை.

இவ்வாறு செல்வி ஜெ. ஜெயலலிதா பேசினார்.

செய்திகள், தமிழகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: