திருமணத்திற்கு முன் பாதுகாப்பான செக்ஸே சிறந்தவழி – குஷ்பு!

கடந்த தினம் எப்.ஐ.சி.சி. நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார் குஷ்பு.  

அந்த நிகழ்ச்சியில் பேசுகையில், “தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே கற்பு குறித்த விவகாரத்தில் தன்னைக் கைவிட்டு விட்டன, அநீதி இழைத்து விட்டன” என்று கூறியுள்ளார் குஷ்பு.

 

தொடர்ந்து, “நான் சட்டத்திற்குப் புறம்பாக எதையும் சொல்லி விடவில்லை. உண்மையில், பாதுகாப்பான செக்ஸ் என்ற விஷயத்தில் அரசின் கொள்கையைத்தான் நான் கூறினேன்.

 

ஒவ்வொரு பெண்ணும், பாதுகாப்பான செக்ஸை மேற்கொள்ள வேண்டும், ஆணுறைகளை, பெண்ணுறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றுதான் நான் சொன்னேன்.

 

கல்யாணத்திற்கு முன்பு ஒரு பெண் உடலுறவு வைத்துக் கொண்டால் கர்ப்பமடையும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்க ஆணுறைகளை பயன்படுத்துவது நல்லது என்றுதான் நான் சொன்னேன். அப்படிச் செய்யாமல் பாதுகாப்பாற்ற முறையில் உடலுறவு வைத்துக் கொண்டால் அந்தப் பெண்ணுக்கு மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினருக்கும் கூட பல பிரச்சினைகள் ஏற்படும் என்பதைத்தான் நான் எடுத்துரைத்தேன்.

kushboo.jpg

 

இப்படிப்பட்ட பிரச்சினைகளைத் தவிர்க்க பாதுகாப்பான செக்ஸே சிறந்த வழி என்றுதான் கூறினேன். இதில் என்ன தவறு இருக்கிறது. ஆனால் பல அரசியல் கட்சிகள் இந்த விஷயத்தில் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி போராட்டங்கள் நடத்தின.

 

குறிப்பாக பாமகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் எனக்கு எதிராக என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாம் செய்து விட்டன.

 

நான் அளித்த பேட்டியில் கூறிய கருத்துக்கள் அனைத்துமே மத்திய அரசின் கருத்துக்கள்தான். அதைத்தான் நான் பிரதிபலித்தேன். இதற்காக மத்திய அரசு மீது இந்த கட்சிகளால் வழக்கு போட முடியுமா? நான் ஒரு பெண் என்பதால் இந்தக் கட்சிகள் என்னைக் குறி வைத்து நடந்து கொண்டன” என்று பேசினார் குஷ்பு.

 

மேலும் பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் தன் மீது 24 வழக்குகளை போட்டதாகவும் குஷ்பு குற்றம் சாட்டினார்.

செய்திகள், தமிழகம் இல் பதிவிடப்பட்டது . 5 Comments »

ஆங்கில புலமையுடையவர்களுக்கு திமுகவில் எம்.பி பதவி!

மேடைகளிலும், சினிமாக்களிலும் அரைகுறை ஆடையில் தமிழக மக்களுக்கு நாட்டிய விருந்து படைத்த ஒரே தகுதியினூடாக அ.தி.முக தலைமை பதவியை வகிக்கும் செல்வி(?!) ஜெ.ஜெயலலிதா அவர்கள், தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் வழங்கப்பட்டது எந்த தகுதியின் அடிப்படையில் என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளிக்கும் போது திமுக மகளிரணி பிரமுகரான கவிஞர் விஜயா தாயன்பன் கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“முதல்வர் கருணாநிதி, தமிழகத்திற்கும், தமிழ் மொழிக்கும், திராவிட இயக்கத்திற்கும் செய்த தியாகமும், உழைப்பும் அளவிட முடியாதது.

அதனால் முதல்வர் கருணாநிதியின் மகள் என்ற தகுதி மட்டும் கனிமொழிக்கு போதுமானது என்றாலும், அவர் நன்கு படித்தவர், நல்ல கவிஞர். ஆங்கிலத்தில் புலமை வாய்ந்தவர். மாநிலங்களவை உறுப்பினராவதற்கான அனைத்து தகுதியும் அவரிடம் இருக்கிறது” 

ஆகவே ஆங்கில புலமை வாய்ந்தவர்கள் உடனடியாக தமிழுக்காகவும், தமிழின வளர்ச்சிக்காகவும் தனது வாழ்நாளையே செலவழித்துக் கொண்டிருக்கும் கலைஞரிடம் உடனடியாக மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக விண்ணப்பிக்கலாம்.

அப்பாடா, அப்படியாவது பாராளுமன்றம் கிரிமினல்களிடமிருந்தும், நாட்டிய, ஆபாச பரதேசிகளிடமிருந்தும், ரவுடிகளிடமிருந்தும் விடுதலை அடைகின்றதா எனப்பார்ப்போம்.

தரமான அரசியல்வாதி!

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நெல்லை பொருட்காட்சி மைதானத்தில் நேற்று நடைபெற்ற மண்ணுரிமை மாநாட்டில் கருணாநிதி கலந்து கொண்டு பேசும் பொழுது, “இந்த மாநாட்டில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற வேண்டுமானால் சாதி ஒழிய வேண்டும்” என்று கூறிய கருணாநிதி, “சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கருத்தை வலியுறுத்தி தாம் நாடகம் எழுதியதாக” கூறினார்.

“இந்த கருத்தை வலியுறுத்தி திருமாவளவன் நிறைவேற்றியிருக்கும் தீர்மானத்தின் மீது தம்மால் ஆன நடவடிக்கைகளை எடுப்பேன்” என்றும் முதல் அமைச்சர் கருணாநிதி கூறினார்.

“சாதிகள் ஒழிய வேண்டுமானால் திருமாவளவன் போன்றவர்கள் சம்பந்தப்பட்ட மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்” என்றும் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.

“பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய பெரியார், அண்ணா போன்ற தலைவர்களை அந்த மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால், அவர்களால் சாதி ஒழிப்பில் முழு வெற்றியை அடையமுடிய வில்லை” என்றும் அவர் கூறினார்.

 கடந்த முறைக்கு முந்தைய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அன்று முளையெடுத்த தலைவனை மட்டுமே கொண்ட சாதி கட்சி முதல் மாடன், சுள்ளன், குப்பன் என ஒரு சாதியையும் விடாமல் அனைத்து சாதி கட்சிகளை தேடிப்பிடித்து கூட்டணி வைத்துக் கொண்ட பகுத்தறிவு காவலர் கருணாநிதி பேசும் பேச்சா இது என ஆச்சரியப்படுபவர்கள் அவர் தற்போது ஓர் தரமான இந்திய குறிப்பாக தமிழக அரசியல் களத்தில் கொட்டை போடும் அரசியல்வாதி என்பதை நினைவில் கொள்க.

செய்திகள், தமிழகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

மதமாம், ஜெபமாம், விபச்சாரமாம்!

கம்ப்யூட்டர் மயமான இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் ஒரு விசித்திர சம்பவம் நடந்துள்ளது.

கோவை, பாப்பநாயக்கன்பாளையம், அன்னை இந்திரா நகரில், சொகுசு பங்களாவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் மதபோதகர் சார்லஸ். திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியைச் சேர்ந்த இவர், மின்சாரத்துறையில் உதவிப் பொறியாளராகப் பணிக்குச் சேர்ந்தார். பிறகு குறி, ஜெபம் என்று தன்னை மதபோதகராகக் காட்டிக் கொண்டதில் கையில் காசு புரண்டது. எனவே அரசுப் பணியை உதறினார்.

சார்லஸின் பேச்சில் மயங்கிய பலரும் அவரோடு ஊழியத்தில் (ஜெபத்தில்) இணைந்துகொள்ள, கார் பங்களா என தனது வசதிகளைப் பெருக்கிக்கொண்டார். எப்போதும் தனது காரில் குட்டி, புட்டிகளுடன் வலம் வந்தார்.

fraud.jpg

இந்நிலையில்தான் கடந்த புதனன்று, சார்லஸின் சகோதரர் செல்வக்குமாரின் மனைவி அனுராதா, கோவை ரேஸ் கோர்ஸ் போலீஸில் பரபரப்பு புகார் ஒன்றைக் கொடுத்தார்.
அன்று இரவே அதிரடியாக சார்லஸின் வீட்டுக்குள் நுழைந்து மாடியில் இருந்த பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த போலீஸôர் அதிர்ச்சியில் நிலை குலைந்து போயினர். அங்கே அறை முழுவதும் புழுக்கள் நெளிய, சிதைந்த எலும்புக் கூடாக ஒரு ஆண் சடலம். அது தனது கணவர் செல்வக்குமார்தான் என அனுராதா அடையாளம் காட்ட பரபரப்பு மேலும் கூடியது.

“என்ன நடந்தது?’ என்பதை செல்வக்குமாரின் மனைவி அனுராதாவே நம்மிடம் விவரித்தார்.

“இனி என்னத்த சொல்றது? அண்ணனைப் பார்த்துட்டு வர்றேன்னு போன ஏப்ரல் 2-ஆம் தேதி எங்களை விட்டு வந்தவரு, இப்ப என்னையும் எனது குழந்தைகளையும் அநாதையாக்கிட்டு போய்ட்டாரே” எனக் கதறியவரை நாம் சமாதானப்படுத்திப் பேச வைத்தோம்.

“என் புருஷன் கொஞ்சம் பயந்த சுபாவம். மூனு மாசத்துக்கு முன்னாடி நைட்டு எதையோ பார்த்துட்டு பயந்தவர், வீட்டில் யாருகிட்டேயும் எதுவும் பேசாமல் இருந்தார். அப்பதான், அண்ணனை போய் பார்த்தா சரியாகிடும்னு எங்ககிட்ட சொல்லிட்டு கோயம்புத்தூர் வந்துட்டாரு. அவுங்க அண்ணன் சார்லஸ் ஊழியத்தில் இருக்கிறதால் குணப்படுத்தி விடுவார்னு நம்பிக்கையில அவரை அனுப்பி வச்சோம்.

ஆனா மூனு மாசமாக என் புருஷனை பத்தி எந்தத் தகவலும் இல்லை. அவுங்க அண்ணன் சார்லஸுக்கு ஃபோன் பண்ணி என் கணவரைப் பத்திக் கேட்டா, வெளியூர் போயிருக்கான், ஒரு ஊழியத்துல இருக்கான்னு சொல்லியே எங்களை சமாளிச்சுட்டு வந்தாரு.

இதனால எங்களுக்கு சந்தேகம் வந்து, போன புதன்கிழமை உறவினர்களோடு கோவை வந்தேன். சார்லஸ் வீட்டுக்கு போனப்ப வீடு பூட்டிக் கிடந்தது. கீழ் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் வின்சென்ட், அக்கம் பக்கத்துல கேட்டப்ப யாரும் எந்த பதிலும் சொல்லலை. அப்ப நான் மாடிக்கு போனேன்.

அங்கே ஒரு விதமான வாடை வீசியது. சந்தேகமடைந்து போலீஸுக்குச் சொன்னோம். அவுங்களும் வந்து கதவை உடைச்சு பார்த்தப்போ சார்லஸ் தனது மனைவி, குழந்தைகளுடன் கட்டில் அருகில் அமர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தார். எனது கணவர் செல்வக்குமார் கட்டிலில் உடல் அழுகி இறந்து கிடந்தார். பாவிப்பய ஊழியம் செய்யுறேன்னு சொல்லி என் புருஷனை கொன்னுட்டான்” எனக் கதறினார் அனுராதா.

இதையடுத்து அருகிலிருந்த செல்வக்குமாரின் மைத்துனர் சாமுவேல் துரைராஜ் நம்மிடம், “ஊழியம் பண்றேன், ஜெபம் பண்றேன்னு சொல்லிட்டு மக்களை ஏமாற்றி காசு வாங்குறதுதான் சார்லஸ்சோட வேலையே…! குடும்பப் பிரச்சினைன்னு சொல்லி யாராவது இவன்கிட்ட வந்தாங்கன்னா குடும்பத்தை நிரந்தரமா பிரிப்பதோடு, பொம்பளைகளை தன் பக்கம் சேர்த்துக்குவான். அப்புறம் அவுங்களை தன்னோட “ஊழியத்துக்கு’ பயன்படுத்திக்குவான். எப்பவுமே சார்லஸோட ஐந்து, ஆறு பொண்ணுங்க இருப்பாங்க.

அவுங்களை எங்க எங்கேயோ கூட்டிட்டுப் போவான். ஜெபம் என்ற பெயர்ல இவன் விபச்சாரத் தொழில் செய்றானோன்னு சந்தேகம் எங்களுக்கு இருக்கு. ஏன்னா இவனோட கௌரி, இந்திரான்னு ரெண்டு பொம்பளைங்க எப்பவும் கூடவே இருப்பாங்க. இவங்களோட மோசமான தொழில் பற்றி அந்த ஏரியாவுக்கே தெரியும். இவங்களை புடிச்சு போலீஸ் விசாரிச்சா எல்லா உண்மையும் தெரிஞ்சிடும்…
போலீஸ் சொல்ற மாதிரி இவன் சைக்கோவெல்லாம் கிடையாது. கிரிமினல்… மச்சான் தூக்குப்போட்டு தற்கொலை செய்யுற அளவுக்கு கோழை அல்ல, அவரை கொலை பண்ணியிருப்பாங்களோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு… இந்த சார்லஸ் பத்தின முழு விவரத்தையும் போலீஸ் விசாரிக்கணும். அப்பதான் உண்மை தெரியும்” என்றார்.

இதற்கிடையே போலீஸ் பிடியில் இருந்த மதபோதகர் சார்லஸ் தனது வாக்கு மூலத்தில், “ஏப்ரல் 6-ஆம் தேதி பிரார்த்தனைக்காக நான் வெளியூர் போய்ட்டேன். அப்ப வீட்டில் தனியா இருந்த என் தம்பி செல்வக்குமார் மனபயத்தால் மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தை என் மனைவி எனக்குச் சொன்னார். இயேசுவின் ஆணையின் பேரில் அவர் மீண்டும் உயிர்த் தெழுவார் என்ற நம்பிக்கையில் இறந்த எனது தம்பியை மீண்டும் உயிர்ப்பிக்க ஜெபம் செய்தோம். 90 நாட்களில் தம்பியை உயிர்ப்பித்து இருப்பேன். உடல் அசைந்து தம்பி உயிர்த் தெழுவதற்கான காலகட்டம் வந்த நிலையில்தான் போலீஸாரும், தம்பி குடும்பத்தினரும் கெடுத்து விட்டனர். தம்பியின் ஆவியுடன் பேசியதில் அவனது கை, கால்களில் அசைவு தெரியத் துவங்கியது. அதற்குள் அவனை உயிர்ப்பிக்க முடியாமல் சாகடித்துவிட்டனர்” என கேஷுவலாக சொல்ல போலீஸாரே அதிர்ச்சியடைந்துவிட்டனர்.

இந்நிலையில் அறுபது நாட்களாக பிண வாடை அக்கம் பக்கம் தெரியாமல் இருக்க, கெமிக்கல்களையும், அறையில் காற்று புகாத வண்ணம் அடைப்புகளையும் ஏற்படுத்தி யாருக்கும் சந்தேகம் வராமல் செய்திருக்கிறார் சார்லஸ். தற்போது சுகாதார சீர்கேடு விளைவித்தல், இறப்பு பற்றி போலீஸுக்கு தகவல் கொடுக்காமல் மறைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் மத போதகர் சார்லஸ், அவரது மனைவி சாந்தி, வின்சென்ட், அவரது மனைவி ஜெயசீலி, உறவினர் ஜான்சன் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்துள்ள போலீஸ் இவர்களின் பின்னணி பற்றியும் தீவிரமாக விசாரித்து வருகிறது.

படித்தது

செய்திகள், தமிழகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

கொடுமை – கின்னஸ் படுத்தும்பாடு!

 பணபைத்தியங்களைகேள்விப்பட்டிருப்பீர்கள். இதுபுகழ்பைத்தியங்களைக்குறித்தது.

கீழேகாணும் படத்தை பாருங்கள் – வெறும் 15 மாதமே ஆன பச்சிளங் குழந்தையை தண்ணீரில் போட்டு கொடுமைப்படுத்துவதை.

ginnus.jpg
சென்னை, திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெருவை சேர்ந்த தம்பதி கமலாகர், விஜயலட்சுமி. இவர்களது மகன் மஹாரந்த் கமலாகர். பிறந்து 15 மாதங்களே ஆன இந்த பச்சிளங் குழந்தையை கின்னஸில் இடம் பிடிக்க வைக்க வேண்டும் என்பதற்காக விஜயலட்சமியின் தம்பி அருண் பாலாஜியிடம் நீச்சல் பயிற்சி எடுக்க வைத்து வருகின்றனர்.

சென்னை காஸ்மோபாலிடன் கிளப்பில் நேற்று மாலை கின்னஸில் இடம் பிடிப்பதற்காக இப்பச்சிளங் குழந்தையை வைத்து பாலாஜி முயற்சி மேற்கொண்டார். இந்த கொடுமையை பார்க்க பலர் அங்குள்ள நீச்சல் குளத்தின் முன் கூடியிருக்கின்றனர். குழந்தை மஹாரந்த் நான்கு மீட்டர் தூரம் மூச்சடைத்து நீந்தியதைப் பார்த்து கூடியிருந்தவர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

குழந்தையின் தாயார், “ஆஸ்திரேலியாவில் இரண்டரை வயது குழந்தை ஒன்று தண்ணீரில் கை, கால்களை அசைத்து மிதப்பதை பார்த்தோம். அப்போது எங்களுக்கு மஹாரந்த்தையும் குறைந்த வயதில் நீந்த வைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவனுக்கு ஒரு வயது ஆன போது நீச்சல் குளத்தில் தண்ணீரில் போட்டோம். அவன் அழவில்லை. நீச்சலடிப்பதில் அவனிடம் முன்னேற்றம் தெரிந்தது. இதையடுத்து அவனுக்கு பயிற்சியளித்து வருகிறோம். தினசரி ஒரு மணி நேரம் பயிற்சி மேற்கொள்வான். எனது மகன் சிறந்த நீச்சல் வீரனாகி, பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு விருதுகள் பெற வேண்டும் என ஆசைப்படுகிறேன்.” என்று கூறினார்.

புகழ் மயக்கம் இப்படியா தாய்மையையும் பலி கொள்ளும்?

சிந்தனைகள், செய்திகள், தமிழகம் இல் பதிவிடப்பட்டது . 6 Comments »

வருங்கால முதல்வரே வருக!

யாரப்பா அந்த புதிய வரவு என்று கலங்க வேண்டாம். எல்லாம் நம்ம நாட்டாமை அய்யாதான். நாட்டாமை அண்ணாச்சி என்ன சொல்றாருன்னு பார்ப்போமா?:

“விரைவில் நான் தொடங்க உள்ள புதிய கட்சியின் கொள்கைகளை வகுக்க ஓய்வு பெற்ற 30 ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுவை அமைத்துள்ளேன்.

நாட்டின் பொருளாதாரம், தொழில், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காக தொலைநோக்குடன் கூடிய கொள்கைகள் வகுக்கப்படும்.

எனினும், மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே கட்சியின் முதலாவது கொள்கையாக இருக்கும்.

எனக்கோ அல்லது எனது சகாக்களுக்கோ தமிழகத்தின் முதல்வராக ஆசை இல்லை. ஆனால், நீங்களும் (மக்களும்) முதல்வராக வரலாம் என்று உணரச் செய்ய பாடுபடுவேன்.

தேர்தலின்போது சராசரியாக 55 சதவீதம் பேர் மட்டுமே வாக்களிக்கின்றனர். இதில் 28 சதவீதம் வாக்குகளை பெறுபவர்களே ஆட்சிப் பொறுப்புக்கு வருகின்றனர்.

எனவே, மீதியுள்ள வாக்காளர்களையும் வாக்களிக்கச் செய்வதன் மூலம் உண்மையான ஜனநாயகத்தை மலரச் செய்ய முடியும்.

காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட எந்தக் கட்சியை மக்கள் விரும்புகிறார்களோ அந்தக் கட்சிக்கு தங்களது வாக்குரிமையை முழுமையாக பயன்படுத்துவது அவசியம்.

அரசியல் தலைவர்கள் தற்போது கொச்சையாக விமர்சனம் செய்கின்றனர். யார் குடிகாரர் என்று தினமும் வாக்குவாதம் நடப்பது வேதனை அளிக்கிறது.

இளைஞர்கள் நல்லொழுக்கத்தை பின்பற்றினால் பல ஆண்டுகள் இளமையுடன் வாழலாம். எம்.ஜி.ஆர். தனது 65 வயதில் கூட துள்ளிக் குதித்து ஓடியதை நான் பார்த்து வியந்துள்ளேன்.

25 ஆண்டுகள் திரைப்படத் துறையில் தொடர்புள்ள நான் அரசியலுக்கு வர எம்ஜிஆர் தான் காரணம். எம்.ஜி.ஆர். தான் எனக்கு முன்மாதிரி.

“நாட்டாமை” போல யாருக்கும் பஞ்சாயத்து செய்ய மாணவர்கள் நினைக்க வேண்டாம்.

மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க பாடுபடுவேன். அதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன். ஆனால், ஒரு நாள் முதல்வராக இருந்து ஒன்றும் சாதிக்க முடியாது.

2 கட்சிகள் உள்ள ஜனநாயக முறை நமக்குப் பொருந்துமா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.”

நம்ம அண்ணாச்சியின் அறிக்கையினைகண்டு புல்லரித்துப் போய் இருப்பவர்களுக்கு -பொறுங்கள். ஏழரை அண்ணாச்சிக்கா அல்லது தமிழக அப்பாவிஜனங்களுக்கா என்பதை பொறுத்தி்ருந்து பார்ப்போம்.

செய்திகள், தமிழகம் இல் பதிவிடப்பட்டது . 3 Comments »

ராமர் பாலத்தால் சுற்றுச்சூழலுக்கு கேடு – சுப்ரமணிய சுவாமி வரவேற்பு!

ராமர் பாலத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவது குறித்து உலக நினைவுச் சின்னங்கள் கண்ணாணிப்பு அமைப்பு கவலை வெளியிட்டுள்ளதற்கு ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியது:

“ராமர் பாலம் பழங்கால நினைவுச் சின்னங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நினைவுச் சின்னம் குறித்து ஆவணங்களை திரட்ட அமெரிக்காவில் இருந்து இயங்கி வரும் உலக நினைவுச் சின்னங்கள் கண்காணிப்பு அமைப்பு முடிவு செய்துள்ளது.

ராமர் பாலம் எவ்வளவு காலத்துக்கு முற்பட்டது என்பதை அறிய அந்த அமைப்பு, ராமர் பாலப் பகுதியில் உள்ள துகள்களை மாதிரியாக கொண்டுச் சென்று ஆய்வு நடத்த உள்ளது.

முன்னதாக இந்த அமைப்பின் தலைவர் மர்லின் பெரி இந்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், சர்வதேச கடல் ஆராய்ச்சி புகைப்படக்காரர்கள் உதவியுடன் இப் பாலத்தின் படம் எடுக்க அனுமதிக்க வேண்டும் என கோரியுள்ளார். மேலும், சுற்றுச்சூழலுக்கு இந்த பாலத்தால் கேடு விளையும் என்றும் மர்லின் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்திகள், தமிழகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

பார்வையிழந்த மாணவன்.

சண்முகராஜ்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் தவறான சிகிச்சையால், மாணவர் ஒருவர் இரு கண்களிலும் பார்வையை இழந்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, பூவாணி ஊராட்சி கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி பொன்ராக்கு. இருவரும் கூலித் தொழிலாளர்கள். இவர்களுக்கு இரு மகன்கள் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். இதில் ஒரு மகன் சண்முகராஜ் (13).

இவர் கிருஷ்ணன்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். 10.10.2006-ம் தேதி பள்ளி முடிந்து வந்த சண்முகராஜுக்கு காய்ச்சல். இதையடுத்து, மாலை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளார்.

மறுநாளும் காய்ச்சல் விடாததால், மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு உள்நோயாளியாக பொது வார்டில் சண்முகராஜை அனுமதித்துள்ளனர். சிகிச்சை அளித்தும் காய்ச்சல் விடவில்லை.

இதையடுத்து, சண்முகராஜை கவனித்த டாக்டர், 12-ம் தேதி அங்குள்ள குழந்தைகள் நல மருத்துவரிடம் விவரத்தைக் கூற, அவர் ஓர் ஊசி போட்டுள்ளார்.

ஊசி போட்ட சில நிமிடங்களில் சண்முகராஜுக்கு காய்ச்சல் விட்டுவிட்டது. ஆனால், இரு கண் பார்வையும் மெல்ல மெல்ல மங்கத் தொடங்கியது. இதை அறிந்த குழந்தைகள் நல டாக்டர் 13-ம் தேதி அதிகாலையில் மருத்துவமனைக்கு வந்து, மதுரை அரசு மருத்துவமனைக்கு சண்முகராஜை கொண்டு செல்லக் கூறி, அவசர அவசரமாக டிஸ்சார்ஜ் செய்துள்ளார்.

உடனடியாக சண்முகராஜை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு 11 நாள்கள் உள்நோயாளியாக இருந்துள்ளார். இறுதியில் எங்களால் முடியவில்லை. வீட்டில் வைத்துக் கவனியுங்கள் எனக் கூறி, டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். அதற்குள் தனது கண்பார்வையை முற்றிலுமாக இழந்து விட்டிருந்தார் சண்முகராஜ்.

பின்னர் மதுரையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் கவனித்துள்ளனர். அவர்கள் மதுரையில் உள்ள ஒரு பிரபல நரம்பியல் மருத்துவரின் ஆலோசனையின்பேரில், சிகிச்சை அளித்துள்ளனர்.

இதனிடையே, மாவட்ட ஆட்சியர் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு முனியாண்டி தனது மகனின் நிலை குறித்து மனு அனுப்பினார்.

அவர்கள் சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனை டீனுக்கு, சண்முகராஜை கவனிக்கச் சொல்லி கடிதம் அளித்துள்ளனர்.

சென்னை மருத்துவமனையில் சில நாள்கள் சிகிச்சை எடுத்துள்ளார் சண்முகராஜ். அவர்களும் முடியவில்லை என கை விரித்துவிட்டனர்.

பின்னர் டீனை முனியாண்டி நேரில் சந்தித்து நிலைமையைக் கூறியுள்ளார். அவர், நீங்கள் தமிழ்நாட்டிலேயே சிறந்த நரம்பியல் நிபுணரிடம் காட்டியுள்ளீர்கள் என்று கூறி, சண்முகராஜை டிஸ்சார்ஜ் செய்து அனுப்பியுள்ளார்.

இதற்கிடையே தனது கூரை வீட்டை விட்டுவிட்டு, மகனுடன் மாதக்கணக்கில் மதுரை, சென்னை என்று அலைந்துள்ளனர். இதனால், வீடு மழைக்கு இடிந்து தரைமட்டமானது.

சண்முகராஜ் படித்துவரும் கிருஷ்ணன்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தங்களால் இயன்ற நிதி உதவி அளித்துள்ளனர். இதுவரை சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் கடன் வாங்கியுள்ளனர்.

மதுரை தனியார் நரம்பியல் மருத்துவரிடம் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே, தனது மகனின் நிலையை அறிந்து இழப்பீடு பெற்று சிகிச்சை பெறலாம் என நினைத்து விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தை முனியாண்டி அணுகியுள்ளார்.

அவர்கள், நீங்கள் பணம் கொடுத்து சிகிச்சை பெற்றிருந்தால் தான் மனுத் தாக்கல் செய்ய முடியும் எனக் கூறிவிட்டனராம்.

தற்போது முனியாண்டி, அரசு மருத்துவர்களின் குறைபாட்டால் பார்வை இழந்த தனது மகனின் சிகிச்சைக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

எம்.எல்.ஏ. கோரிக்கை: ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப் பேரவை உறுப்பினர் தி. ராமசாமி, முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், அரசு மருத்துவர்கள் போட்ட ஊசியால் பார்வை இழந்த மாணவருக்கு சிகிச்சை அளக்க பெருமளவு செலவு செய்ய வேண்டியுள்ளது. மிகவும் ஏழையான முனியாண்டியால் தனது மகனைக் காப்பாற்ற முடியாத நிலை உள்ளது. எனவே, முதல்வர் நிவாரண நிதியிலிருந்து நிதி உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒரு மாணவரின் வாழ்க்கை இருள் சூழ்ந்திருக்கிறது. ஒரு குடும்பத்தின் கனவு சுக்கு நூறாக நொறுங்கிவிட்டிருக்கிறது. பொறுப்பில்லாத மருத்துவர்கள், உதவிக்கரம் நீட்டாத நுகர்வோர் குறைதீர் மன்றம், ஆதரவு தரத் தயங்கும் அதிகாரிகள். பாவம் சண்முகராஜ்.

நன்றி: தினமணி

உதவிகள், செய்திகள், தமிழகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

“திமுக அரசின் கதை முடியப்போகிறது” – ஜெ.ஜெயலலிதா!

அதிமுக கழக தொண்டர் ஒருவரின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு செல்வி ஜெ.ஜெயலலிதா பேசும் பொழுது தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசின் கதை விரைவில் முடியப்போகிறது என்று கூறினார்.

சென்னையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை இடிக்க அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையில் நடந்த கழக தொண்டரின் மகள் திருமணவிழாவில் கலந்து கொண்டு அவர் பேசும் பொழுது முதல்வருக்கு எதிராக கடுமையான வாசகத்தை பிரயோகித்து சாடவும் செய்தார்.

அவர் அங்கு பேசும் பொழுது, “நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தான் வாழ வேண்டும், தன்னைச் சார்ந்தவர்களும் வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்கள் சமுதாயத்துக்கும் பயனுள்ளவர்களாக இருப்பார்கள்.

திருமண விழாக்களில் நல்ல வார்த்தைகள் பேச வேண்டும். மங்களகரமாகப் பேச வேண்டும். ஆனால் இன்று சூழ்நிலை வேறுவிதமாக உள்ளது. எம்ஜிஆர் 1972ல் நிறுவிய அதிமுக தலைமை அலுவலக கட்டடத்தையே இடிக்க அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதன்மூலம் இந்த அரசின் கதை முடியப்போகிறது. இந்த மகிழ்ச்சியான நேரத்தில் அதுபற்றி அதிகம் பேச விரும்பவில்லை.

இவ்வாறு செல்வி ஜெ. ஜெயலலிதா பேசினார்.

செய்திகள், தமிழகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »