புலிகளுக்கு எதிராக இஸ்ரேல்!

இஸ்ரேலிடம் இருந்து நவீன புளு ஹொரிசோன் – 02 எனப்படும் ஆளில்லாத உளவு விமானங்களை வாங்குவதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான இந்த விமானங்களை இலங்கை அரசு எவ்வித பரிசோதனைகளையும் மேற்கொள்ளாமலும், வேறு நாடுகளிடம் இருந்து கேள்விப்பத்திரங்களை(Tenders) கோராமலும் வாங்க முடிவெடுத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்த உளவு விமானங்கள் தொடர்பாக மேலதிக தகவல்களை அறிய பயணம் மேற்கொண்ட இலங்கையின் பாதுகாப்புத்துறை மற்றும் வான்படை அதிகாரிகள் குழுவில் இடம்பெற்றிருந்த மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும், பாதுகாப்புத்துறை ஆலோசகருமான முனிந்திரதாச உடல்நிலை பாதிக்கப்பட்டு இஸ்ரேலில் மரணமாகியிருந்தார்.

முனிந்திரதாச ஆளிலில்லாத உளவு விமானங்கள் தொடர்பான தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்கு முன் இந்தியாவில் காஷ்மீர் தீவிரவாதிகளை எதிர்கொள்வதற்காக இந்திய இராணுவத்தினருக்கு பயிற்சியளிக்க இஸ்ரேலிய மொசாத் மற்றும் இராணுவ உயாரதிகாரிகள் இந்தியா வந்தடைந்ததுகவனிக்கப்படவேண்டிய விஷயமாகும்.

இலங்கை, செய்திகள் இல் பதிவிடப்பட்டது . 1 Comment »

தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றுவதற்கு எதிராக நீதிமன்றம்!

கொழும்பு: இலங்கை தலைநகரான கொழும்புவில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு துவக்கிய இன சுத்தீகரிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என இலங்கை உச்சநீதி மன்றம் கட்டளை பிறப்பித்தது.  தலைநகரில் வசித்து வந்த தமிழர்களை இலங்கை காவல்துறை கைதுசெய்து இலங்கையின் வடக்கு பகுதிகளுக்கு மாற்றிய நடவடிக்கைக்கு எதிராக செண்டர் ஃபார் பாலிஸி ஆல்டர்நேட்டீவ்ஸ்(Center for Policy Alternatives) என்ற அமைப்பு தாக்கல் செய்த வழக்கில் உச்சநீதி மன்றம் இத்தீர்ப்பை வழங்கியது.

ஜூன் 22 ஆம் தேதி இவ்வழக்கு தொடர்பாக வாதம் கேட்பது வரை காவல்துறை அதிகாரிகள் தமிழர்களுக்கு எதிரான இந்நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது.

கொழும்புவில் ஹோட்டல்களிலும் மற்ற இடங்களிலும் தங்கியிருந்த 400 க்கும் மேற்பட்ட தமிழர்களை கடந்த தினம், நகரத்தில் விடுதலைப் புலிகளின் ஊடுருவலை தடைகின்றோம் என்ற பெயரில் வெளியேற்றப்பட்டனர். இவர்களை பத்திக்கலோவா, வவுனியா போன்ற இடங்களுக்கு காவல்துரை அனுப்பியது.

இவ்வெளியேற்றத்தை இன சுத்தீகரிப்பு எனக் கூறி இதற்கு எதிராக ஃப்ரீ மீடியா மூவ்மெண்ட்(Free Media Movement) என்ற மனித உரிமை கழகமும் போராட்டத்தில் குதித்திருந்தது.

இலங்கையின் தலைநகரிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றோம் என்ற பெயரில் தமிழர்களை வடக்குப் பகுதிக்கு நாடுகடத்திய இலங்கை காவல்துறையின் செயல்பாடு, அவர்களே தனி தமிழீழத்தை அங்கீகரித்ததற்கு ஒப்பாகும் என இதற்கு இதற்கு எதிராக தே.மு.தி.க தலைவர் நடிகர் விஜயகாந்த் அவர்களும் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இலங்கை, செய்திகள் இல் பதிவிடப்பட்டது . 3 Comments »

புலிகள் தாக்குதலில் 156 இராணுவத்தினர் பலி!

கடந்த சில நாட்களாக வவுனியா பகுதிகளில் நடைபெற்ற சண்டையில் 156 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியின் செய்தித்துறை தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

“விடுதலைப் புலிகள் வசம் 95 சடலங்கள் இருக்கின்றன. அவை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட உள்ளன. இந்த மோதல்களில் விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தின் இரு டாங்கிகளை எடுத்துச் சென்றுள்ளதுடன் 10 கொள்கலன்களில் உள்ள வெடிபொருட்கள் மற்றும் கனரக ஆயுதங்களையும் அழித்துள்ளனர்.

இலங்கை இராணுவத்திற்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய இவ்வளவு உக்கிரமான மோதல் நடைபெற்ற சமயம் இல்லங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவிற்கு பறந்து விட்டார். மோசமான நிலைமையில் அவர் தனது கடமையை மறந்து எவ்வாறு அமெரிக்கா செல்லலாம்?

ராஜபக்ச குடும்பத்தினர் அதிகாரத்தில் உள்ள போது தங்களால் முடிந்த அளவிற்கு தமது பைகளை நிரப்பி வருகின்றனர். பின்னர் அவர்கள் அவரவர் இடத்திற்கு சென்று விடுவார்கள்” என்று பேசினார்.

லக்ஸ்மன் கிரியெல்லாவின் இப்பேச்சைக் குறித்து இராணுவ பேச்சாளர்ர் பிரசாத் சமரசிங்க கருத்து கூறுகையில், “விடுதலைப் புலிகள் 13 இராணுவத்தினரின் சடலங்களை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளித்துள்ளனர், எனினும் நான் இராணுவப் பேச்சாளராக இருப்பதால் அரசியல்வாதிகளின் அறிக்கைகளுக்கு என்னால் பதிலளிக்க முடியாது” என்று கூறினார்.

 
 
இலங்கை, செய்திகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

புலிகள் தாக்குதலில் 20 இராணுவத்தினர் பலி!

இலங்கையின் வட பகுதியில் ராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை இராணுவத்திற்கு பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இதில் 20 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

இலங்கையின் வடக்கு பகுதிகளான வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு இடையில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளின் ஊடாக இலங்கை ராணுவத்தினர் முன்னேறி வந்தனர். இதையடுத்து அவர்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்த துவங்கினர். அதிபர் ராஜபக்ஷே பதவி ஏற்ற பின்னர் தொடர்ந்து இதுபோன்ற தாக்குதல்கள் இரு தரப்பிலும் நடந்து வருகிறது.

நேற்றைய தாக்குதலில் ராணுவத்தை சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்தனர். விடுதலைப்புலிகள் இந்த த்ஆக்குதலில் ராணுவத்தின் ஒரு முகாமை முற்றிலுமாக அழித்ததோடு, அங்கு இருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் விடுதலைப் புலிகளின் பகுதியில் இருந்து ராணுவத்தினர் முழுவதுமாக விரட்டி அடிக்கப்பட்டனர்.

இந்த தகவலை விடுதலைப் புலிகளின் செய்தி தொடர்பாளர் ராசையா இளந்திரையன் தெரிவித்தார். இது விடுதலைப் புலிகளின் இணைய தளத்திலும் வெளியிடப் பட்டுள்ளது. ஆனால், இந்த தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்பு சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை.

இது குறித்து இலங்கை ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “விடுதலைப் புலிகளுடன் நடந்த சண்டையில் 3 ராணுவ வீரர்கள் மட்டுமே கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் கடும் சேதம் ஏற்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளது.

இலங்கை, செய்திகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »