டெல்லியில் தீவிரவாதிகள் தாக்கும் ஆபத்து!

அடுத்த இரண்டு வாரத்துக்குள் டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. இதை தொடர்ந்து பஸ், ரெயில் நிலையங்கள் உட்பட நகரம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹர்கத் உல் ஜிஹாதி அல் இஸ்லாமி (ஹூஜி) ஆகிய இயக்கங்களை சேர்ந்த தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கூட உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோர்ட்டுகளில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த இருப்பதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு டெல்லி போலீஸ் கமிஷனர் ஒய்.எஸ்.அத்வாலுக்கு உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது. உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் இந்த தகவலை தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், “டெல்லியில் வசிக்கும் சிலருடைய உதவியோடு மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று போலீஸ் கமிஷனருக்கு உளவுத்துறை எச்சரித்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்களுக்குள் இந்த தாக்குதல் நடைபெறும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது” என்றார்.

இதையடுத்து டெல்லியில் உள்ள அனைத்து உதவி போலீஸ் கமிஷனர்களுக்கும் அத்வால் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, நகரில் உள்ள அனைத்து இன்டெர் நெட் மையங்களிலும் வாடிக்கையாளர்களின் விவரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவர்களது `கம்ப்யூட்டர் லாக் கோடு’ குறித்த விபரங்களையும் சேகரிக்குமாறு கூறப்பட்டுள்ளது. சமீப காலமாக இன்டெர் நெட் மூலமாகவே தீவிரவாதிகள் தகவல் பரிமாற்றம் செய்து வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தவிர மார்க்கெட் பகுதிகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் ரெயில் மற்றும் பஸ் நிலையங்கள் போன்ற மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. வெடிகுண்டு செயலிழக்க செய்யும் படையினர், அதிரடி படையினர், மோப்ப நாய்கள் மற்றும் பல்வேறு சிறப்பு பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

டெல்லிக்குள் நுழையும் அனைத்து எல்லைகளிலும் கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஓட்டல்களில் தங்கி இருப்பவர்கள் மற்றும் வாகன நிறுத்தங்களில் இருக்கும் வாகனங்கள் குறித்த முழு விவரங்களையும் பட்டியல் போட்டு வைத்து இருக்குமாறு ஓட்டல்களின் உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். – செய்தி.

நாட்டில் என்ன நடக்கின்றது என்பதே புரியவில்லை. நந்திகிராமும், குஜராத்தும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கும் வேளையில் இன்னும் இரு வாரத்தில் குண்டு வெடிக்கும் ஆபத்தாம்.

இந்தியப் பாராளுமன்றத் தாக்குதல் நடப்பதற்கு முன்னர் எல்.கெ.அத்வானி அவர்களும் இதே போன்றதொரு அறிக்கை தான் விடுத்திருந்தார். அவர் குறிப்பிட்ட நாட்களுக்குள் பாராளுமன்றத்தின் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு, தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து  தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதுவரை அத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்த முழுமையான தகவல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. முன்னரே ஞானக்கண் கொண்டு சம்பவத்தைக் குறித்து முன்னறிவிப்புச் செய்த தேசப்பற்றாளர் எல்.கே.அத்வானி இப்பொழுதும் ஹாயாகச் சுற்றி திரிகிறார்.

இப்பொழுது அதே போன்ற ஓர் முன்னறிவிப்பு உளவுத்துறையிடமிருந்து.

குறிப்பிடுவது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கட்டும். அவ்வாறு நடைபெற்றால்……?

இந்தியா, செய்திகள் இல் பதிவிடப்பட்டது . 1 Comment »

பர்தாவுக்கு எதிராக புதிய ஜனாதிபதி.

ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராஜஸ்தான் கவர்னர் பிரதீபாபட்டீல், ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இந்தியாவில் பெண்கள் பர்தா அணிவது எதிராக கருத்துக்களை தெரிவித்தார்.

“பெண்கள் முகத்தை மூடும் பர்தா அணிய தேவை இல்லை. எத்தனையோ ஆண்டுகளாக இருந்து வந்த இந்த பழக்கத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்தியாவில் பெண்கள் பர்தா அணியும் பழக்கம் முகலாயர் ஆட்சி காலத்தில் தான் ஏற்பட்டது. படையெடுத்து வந்த முகலாயர்களிடமிருந்து தங்களை பாதுகாக்கவே பெண்கள் பர்தா அணிந்தனர். தற்போது சுதந்திர இந்தியாவில் அதற்கான அவசியம் ஏதும் இல்லை. எனவே பெண்கள் அவற்றை விட்டு வெளிவர வேண்டும்” என்று கூறினார்.

புதிய ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ப்ரதிபா பெண்களின் முன்னேற்றத்திற்காக குரல் கொடுக்கக் கூடியவர் என்பதும், அவர்களின் விடுதலைக்காக பாடுபடக் கூடியவர் என்பதும் அவரின் பர்தாவை குறித்த இக்கருத்துக்களில் இருந்து தெளிவாகிறது.

நாட்டில் பெண்களின் விடுதலைக்கும், முன்னேற்றத்திற்கும் இத்தகைய தலைவர்கள் நாட்டிற்கு தற்போது மிக அவசியம் ஆகும். அவர் ஜனாதிபதியாக தேர்வாக வாழ்த்துவோம்.

இந்தியா, செய்திகள் இல் பதிவிடப்பட்டது . 6 Comments »

பாகல்பூர் கலவரம் – 14 பேர் குற்றவாளிகள்.

பீகார் மாநிலம் பாகல்பூரில் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராக ஹிந்துத்துவ நாச சக்திகளால் 1989 – ல் கலவரம் நடத்தப்பட்டது. இதில் சிறுபான்மையினர் 116 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவ்வழக்கில் காவல்துறை அதிகாரி மற்றும் கிராம தலைவர் உட்பட 24 பேர் மீது வழக்கு பதிவு செய்து குற்றம்சாட்டப்பட்டது. 18 வருடங்களுக்குப் பிறகு இவ்வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 14 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஷம்புநாத் மிஸ்ரா, இவர்களுக்கான தண்டனை இம்மாதம் 27ம் தேதி அறிவிக்கப்படும் என்றார்.வழக்கின் முடிவு குறித்து கேட்டுக் கொண்டிருந்த குற்றவாளிகளில் ஜெய் பிரகாஷ் மண்டல் என்பவர் நீதிமன்றத்திலிருந்து தப்பியோடி விட்டார். அவரைப் பிடிக்க பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் இந்த சம்பவம் நடைபெற்ற போது ஜக்தீஷ்பூர் காவல்நிலையத்தின் பொறுப்பாளராக இருந்த ராமச்சந்திர சிங் மற்றும் கிராமத்தலைவர் தாக்குர் பாஸ்வான் ஆகியோரும் குற்றவாளிகளே என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்ட 24 பேர்களில் 6 பேர் மரணமடைந்துவிட்டனர். மற்ற நான்கு பேர் தலைமறைவாகியுள்ளனர்.நாட்டில் நடந்த சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்களில் மிக அதிகபட்சமாக குற்றம் சுத்தப்பட்டவர்கள் அனைவருமே குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது இதுவேமுதல்முறை என கருதப்படுகிறது.

இந்தியா, செய்திகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

இந்தியாவில் தேவதாசி முறை தொடர்கிறது!

இந்தியாவில் பெண்கள் மத ரீதியாக பாலியல் அடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கப்படுவது இன்னமும் தொடர்கிறது என்று பிபிசி நடத்திய ஒரு புலனாய்வில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கத்தை ஒழிப்பதற்காக சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், பாரம்பரிய இந்துக் கலாச்சாரத்துடன் தொடர்புடைய இந்த வழமை இன்னமும் தொடரத்தான் செய்கிறது.

எல்லம்மா என்னும் பெண் தெய்வத்தை வழிபடும் முறைமை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அங்கு தொடருகிறது. அந்த பெண் தெய்வத்தை வழிபடுபவர்கள், தமது பெண் குழந்தைகளை அந்த தெய்வத்துக்கு சேவை செய்வதற்காக காணிக்கையாக்குகின்றனர்.

அந்தப் பெண்கள் தேவதாசிகள், அதாவது தெய்வத்தின் அடிமைகள் என்று அழைக்கப்படுவார்கள். ஆனால் தெய்வத்தின் அடிமைகளாக சித்தரிக்கப்படும் இந்த பெண்களில் பலரது வாழ்க்கை ஒட்டுமொத்தத்தில் பாலியல் அடிமைகளாகத்தான் சென்று முடிகிறது.

50 வருடங்களுக்கு முன்னர் இந்த தேவதாசி முறைமையைத் ஒழிக்கும் சட்டம் அமலுக்கு வந்திருக்கின்ற போதிலும், தேவதாசிகளாக பெண்கள் பொட்டுக்கட்டப்படுவது, பாலியல் அடிமைகளாக வாழ்க்கை தொடர்வதும் இன்னமும் தொடரத்தான் செய்கிறது. கர்நாடக மாநிலத்தில் மாத்திரம் சுமார் இருபத்தையாயிரம் தேவதாசிகள் இருப்பதாக இந்த முறைமைக்கு எதிரான செயற்பாட்டாளர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

படித்தது.

இந்தியா, செய்திகள் இல் பதிவிடப்பட்டது . 2 Comments »

எம்.எல்.ஏக்கள் நீக்கம் – பாஜக அதிரடி.

ராஜஸ்தானில் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக எம்.எல்.ஏ.க்கள் இருவரை பாரதீய ஜனதா கட்சி இடைநீக்கம் செய்தது.

இதன்படி, ‘அட்டர் சிங் பாந்தா மற்றும் பிரஹலாத் குன்ஜால் ஆகியோர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாகவும், ஒரு வார காலத்தில் அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷர்மா தெரிவித்தார்.

மேலும், அவ்வாறு விளக்கமளிக்கவில்லை என்றால், அவர்களை நீக்குவது குறித்து தலைமையிடத்தில் பரிந்துரைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

குர்ஜார் விவகாரத்தில் மாநில முதல்வர் வசுந்தரா ராஜேவின் மோசமான செயல்பாட்டின் காரணமாக, அடுத்தத் தேர்தலில் கோட்காவில் உள்ள இரு தொகுதிகளில் அவருக்கு எதிராக இவ்விருவரும் செயல்பட திட்டமிட்டிருந்தனர். இதனை காரணம்காட்டி அவ்விருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மேலும் 20 எம்.எல்.ஏ.க்களுக்கு பாரதீய ஜனதா கட்சி எச்சரிக்கை விடுத்திருக்கின்றது.

இந்தியா, செய்திகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

மதரசாக்கள் அறிவு மையங்கள் – ராஜசேகர ரெட்டி.

ஐதராபாத்தில் மதரசாக்களுக்கு உருது அகாடமி சார்பில் கம்ப்யூட்டர் வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பேசியதாவது:

“முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இது தொடர்பாக எழுந்துள்ள சட்டப்பூர்வமான தடைகளை எதிர்கொண்டு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் இன்னும் 30 நாட்களில் அவசரச் சட்டம் கொண்டுவரப்படும். சிறுபான்மையினர் நலனில் மாநில அரசு மிகவும் அக்கறை கொண்டுள்ளது. மதரசாக்களில் நவீன கல்வி கற்றுத்தர ஏற்பாடு செய்யப்படும்.”

“மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், மாநிலத்தில் தெலுங்கு தேசமும் ஆட்சி செய்தபோது, தீவிரவாத பயிற்சி முகாம்களாக மதரசாக்கள் சித்தரிக்கப்பட்டன. ஆனால், அவை அறிவு மையங்கள் என்று காங்கிரஸ் அரசு கருதுகிறது. மதரசாக்களை நவீனப்படுத்த அரசு எல்லா உதவிகளையும் செய்யும்”. இவ்வாறு ராஜசேகர ரெட்டி பேசினார்.

இந்தியா, செய்திகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

அரசை ஏமாற்றிய அமிதாப்பச்சன்!

உத்தர பிரதேசத்தில் உள்ள பராபாங்கி என்ற மாவட்டத்தில் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் விவசாய நிலங்கள் வாங்கி இருந்தார். அம்மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களை வாங்க சம்பந்தப்பட்டாவர் ஓர் விவசாயியாக இருக்க வேண்டும். அமிதாப் தன்னை ஓர் விவசாயி என போலியாக ஆவணங்களை தயாரித்து ஏமாற்றி அந்த நிலங்களை வாங்கியுள்ளார். இந்த பிரச்சினை தொடர்பாக அந்த மாநிலத்தில் உள்ள பைசாபாத் கோர்ட்டில் பராபாங்கி கலெக்டர் வழக்கு தொடர்ந்தார்.

அமிதாப்பச்சன் தன்னை விவசாயி என்று பொய் தகவல் கொடுத்துள்ளதாக அவர் அந்த மனுவில் கூறினார். இதற்கு பதிலளித்து அமிதாப்பச்சன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் “தான் ஒரு விவசாயி என்றும் எனவே விவசாய நிலங்களை வைத்துக் கொள்ள தனக்கு உரிமை உண்டு” என்றும்  தெரிவித்தார்.

அமிதாப்பின் பதிலை பைசாபாத் கோர்ட் கடந்த 1-ந் தேதியன்று நிராகரித்தது. அமிதாப்பச்சன் தாக்கல் செய்த ஆவணங்கள் அடிப்படையில் அவர் ஒரு விவசாயி அல்ல என்றும் கோர்ட்டு தெரிவித்தது. இந்த தீர்ப்பை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்திலும் அமிதாப் போலி ஆவணங்கள் தயாரித்து வாங்கிய அவரின் நிலங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பாவனா அணை அருகே 20 ஏக்கர் விவசாய நிலங்களை அமிதாப்பச்சன் வாங்கி உள்ளார். அந்த மாநிலத்தின் விவசாய நில சட்டப்படி, விவசாயிகள் மட்டுமே மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாய நிலங்களை வாங்க முடியும். உத்தரபிரதேசத்தில் வாங்கியதை போலவே மகாராஷ்டிராவிலும் தன்னை விவசாயி என்று பொய் கூறி அரசை ஏமாற்றி நிலங்களை வாங்கி உள்ளார்.

இவ்வாறு அமிதாப் வாங்கிய நிலங்கள் அரசால் விரைவில் பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிகிறது. மேலும் அவர் மீது போலி ஆவணங்கள் தயாரித்து அரசை ஏமாற்றியதாக கிரிமினல் வழக்கு தொடரப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா, செய்திகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »