டெல்லியில் தீவிரவாதிகள் தாக்கும் ஆபத்து!

அடுத்த இரண்டு வாரத்துக்குள் டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. இதை தொடர்ந்து பஸ், ரெயில் நிலையங்கள் உட்பட நகரம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹர்கத் உல் ஜிஹாதி அல் இஸ்லாமி (ஹூஜி) ஆகிய இயக்கங்களை சேர்ந்த தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கூட உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோர்ட்டுகளில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த இருப்பதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு டெல்லி போலீஸ் கமிஷனர் ஒய்.எஸ்.அத்வாலுக்கு உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது. உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் இந்த தகவலை தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், “டெல்லியில் வசிக்கும் சிலருடைய உதவியோடு மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று போலீஸ் கமிஷனருக்கு உளவுத்துறை எச்சரித்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்களுக்குள் இந்த தாக்குதல் நடைபெறும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது” என்றார்.

இதையடுத்து டெல்லியில் உள்ள அனைத்து உதவி போலீஸ் கமிஷனர்களுக்கும் அத்வால் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, நகரில் உள்ள அனைத்து இன்டெர் நெட் மையங்களிலும் வாடிக்கையாளர்களின் விவரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவர்களது `கம்ப்யூட்டர் லாக் கோடு’ குறித்த விபரங்களையும் சேகரிக்குமாறு கூறப்பட்டுள்ளது. சமீப காலமாக இன்டெர் நெட் மூலமாகவே தீவிரவாதிகள் தகவல் பரிமாற்றம் செய்து வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தவிர மார்க்கெட் பகுதிகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் ரெயில் மற்றும் பஸ் நிலையங்கள் போன்ற மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. வெடிகுண்டு செயலிழக்க செய்யும் படையினர், அதிரடி படையினர், மோப்ப நாய்கள் மற்றும் பல்வேறு சிறப்பு பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

டெல்லிக்குள் நுழையும் அனைத்து எல்லைகளிலும் கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஓட்டல்களில் தங்கி இருப்பவர்கள் மற்றும் வாகன நிறுத்தங்களில் இருக்கும் வாகனங்கள் குறித்த முழு விவரங்களையும் பட்டியல் போட்டு வைத்து இருக்குமாறு ஓட்டல்களின் உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். – செய்தி.

நாட்டில் என்ன நடக்கின்றது என்பதே புரியவில்லை. நந்திகிராமும், குஜராத்தும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கும் வேளையில் இன்னும் இரு வாரத்தில் குண்டு வெடிக்கும் ஆபத்தாம்.

இந்தியப் பாராளுமன்றத் தாக்குதல் நடப்பதற்கு முன்னர் எல்.கெ.அத்வானி அவர்களும் இதே போன்றதொரு அறிக்கை தான் விடுத்திருந்தார். அவர் குறிப்பிட்ட நாட்களுக்குள் பாராளுமன்றத்தின் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு, தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து  தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதுவரை அத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்த முழுமையான தகவல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. முன்னரே ஞானக்கண் கொண்டு சம்பவத்தைக் குறித்து முன்னறிவிப்புச் செய்த தேசப்பற்றாளர் எல்.கே.அத்வானி இப்பொழுதும் ஹாயாகச் சுற்றி திரிகிறார்.

இப்பொழுது அதே போன்ற ஓர் முன்னறிவிப்பு உளவுத்துறையிடமிருந்து.

குறிப்பிடுவது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கட்டும். அவ்வாறு நடைபெற்றால்……?

இந்தியா, செய்திகள் இல் பதிவிடப்பட்டது . 1 Comment »

திருமணத்திற்கு முன் பாதுகாப்பான செக்ஸே சிறந்தவழி – குஷ்பு!

கடந்த தினம் எப்.ஐ.சி.சி. நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார் குஷ்பு.  

அந்த நிகழ்ச்சியில் பேசுகையில், “தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே கற்பு குறித்த விவகாரத்தில் தன்னைக் கைவிட்டு விட்டன, அநீதி இழைத்து விட்டன” என்று கூறியுள்ளார் குஷ்பு.

 

தொடர்ந்து, “நான் சட்டத்திற்குப் புறம்பாக எதையும் சொல்லி விடவில்லை. உண்மையில், பாதுகாப்பான செக்ஸ் என்ற விஷயத்தில் அரசின் கொள்கையைத்தான் நான் கூறினேன்.

 

ஒவ்வொரு பெண்ணும், பாதுகாப்பான செக்ஸை மேற்கொள்ள வேண்டும், ஆணுறைகளை, பெண்ணுறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றுதான் நான் சொன்னேன்.

 

கல்யாணத்திற்கு முன்பு ஒரு பெண் உடலுறவு வைத்துக் கொண்டால் கர்ப்பமடையும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்க ஆணுறைகளை பயன்படுத்துவது நல்லது என்றுதான் நான் சொன்னேன். அப்படிச் செய்யாமல் பாதுகாப்பாற்ற முறையில் உடலுறவு வைத்துக் கொண்டால் அந்தப் பெண்ணுக்கு மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினருக்கும் கூட பல பிரச்சினைகள் ஏற்படும் என்பதைத்தான் நான் எடுத்துரைத்தேன்.

kushboo.jpg

 

இப்படிப்பட்ட பிரச்சினைகளைத் தவிர்க்க பாதுகாப்பான செக்ஸே சிறந்த வழி என்றுதான் கூறினேன். இதில் என்ன தவறு இருக்கிறது. ஆனால் பல அரசியல் கட்சிகள் இந்த விஷயத்தில் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி போராட்டங்கள் நடத்தின.

 

குறிப்பாக பாமகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் எனக்கு எதிராக என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாம் செய்து விட்டன.

 

நான் அளித்த பேட்டியில் கூறிய கருத்துக்கள் அனைத்துமே மத்திய அரசின் கருத்துக்கள்தான். அதைத்தான் நான் பிரதிபலித்தேன். இதற்காக மத்திய அரசு மீது இந்த கட்சிகளால் வழக்கு போட முடியுமா? நான் ஒரு பெண் என்பதால் இந்தக் கட்சிகள் என்னைக் குறி வைத்து நடந்து கொண்டன” என்று பேசினார் குஷ்பு.

 

மேலும் பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் தன் மீது 24 வழக்குகளை போட்டதாகவும் குஷ்பு குற்றம் சாட்டினார்.

செய்திகள், தமிழகம் இல் பதிவிடப்பட்டது . 5 Comments »

ஆங்கில புலமையுடையவர்களுக்கு திமுகவில் எம்.பி பதவி!

மேடைகளிலும், சினிமாக்களிலும் அரைகுறை ஆடையில் தமிழக மக்களுக்கு நாட்டிய விருந்து படைத்த ஒரே தகுதியினூடாக அ.தி.முக தலைமை பதவியை வகிக்கும் செல்வி(?!) ஜெ.ஜெயலலிதா அவர்கள், தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் வழங்கப்பட்டது எந்த தகுதியின் அடிப்படையில் என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளிக்கும் போது திமுக மகளிரணி பிரமுகரான கவிஞர் விஜயா தாயன்பன் கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“முதல்வர் கருணாநிதி, தமிழகத்திற்கும், தமிழ் மொழிக்கும், திராவிட இயக்கத்திற்கும் செய்த தியாகமும், உழைப்பும் அளவிட முடியாதது.

அதனால் முதல்வர் கருணாநிதியின் மகள் என்ற தகுதி மட்டும் கனிமொழிக்கு போதுமானது என்றாலும், அவர் நன்கு படித்தவர், நல்ல கவிஞர். ஆங்கிலத்தில் புலமை வாய்ந்தவர். மாநிலங்களவை உறுப்பினராவதற்கான அனைத்து தகுதியும் அவரிடம் இருக்கிறது” 

ஆகவே ஆங்கில புலமை வாய்ந்தவர்கள் உடனடியாக தமிழுக்காகவும், தமிழின வளர்ச்சிக்காகவும் தனது வாழ்நாளையே செலவழித்துக் கொண்டிருக்கும் கலைஞரிடம் உடனடியாக மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக விண்ணப்பிக்கலாம்.

அப்பாடா, அப்படியாவது பாராளுமன்றம் கிரிமினல்களிடமிருந்தும், நாட்டிய, ஆபாச பரதேசிகளிடமிருந்தும், ரவுடிகளிடமிருந்தும் விடுதலை அடைகின்றதா எனப்பார்ப்போம்.

புலிகளுக்கு எதிராக இஸ்ரேல்!

இஸ்ரேலிடம் இருந்து நவீன புளு ஹொரிசோன் – 02 எனப்படும் ஆளில்லாத உளவு விமானங்களை வாங்குவதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான இந்த விமானங்களை இலங்கை அரசு எவ்வித பரிசோதனைகளையும் மேற்கொள்ளாமலும், வேறு நாடுகளிடம் இருந்து கேள்விப்பத்திரங்களை(Tenders) கோராமலும் வாங்க முடிவெடுத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்த உளவு விமானங்கள் தொடர்பாக மேலதிக தகவல்களை அறிய பயணம் மேற்கொண்ட இலங்கையின் பாதுகாப்புத்துறை மற்றும் வான்படை அதிகாரிகள் குழுவில் இடம்பெற்றிருந்த மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும், பாதுகாப்புத்துறை ஆலோசகருமான முனிந்திரதாச உடல்நிலை பாதிக்கப்பட்டு இஸ்ரேலில் மரணமாகியிருந்தார்.

முனிந்திரதாச ஆளிலில்லாத உளவு விமானங்கள் தொடர்பான தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்கு முன் இந்தியாவில் காஷ்மீர் தீவிரவாதிகளை எதிர்கொள்வதற்காக இந்திய இராணுவத்தினருக்கு பயிற்சியளிக்க இஸ்ரேலிய மொசாத் மற்றும் இராணுவ உயாரதிகாரிகள் இந்தியா வந்தடைந்ததுகவனிக்கப்படவேண்டிய விஷயமாகும்.

இலங்கை, செய்திகள் இல் பதிவிடப்பட்டது . 1 Comment »

பர்தாவுக்கு எதிராக புதிய ஜனாதிபதி.

ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராஜஸ்தான் கவர்னர் பிரதீபாபட்டீல், ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இந்தியாவில் பெண்கள் பர்தா அணிவது எதிராக கருத்துக்களை தெரிவித்தார்.

“பெண்கள் முகத்தை மூடும் பர்தா அணிய தேவை இல்லை. எத்தனையோ ஆண்டுகளாக இருந்து வந்த இந்த பழக்கத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்தியாவில் பெண்கள் பர்தா அணியும் பழக்கம் முகலாயர் ஆட்சி காலத்தில் தான் ஏற்பட்டது. படையெடுத்து வந்த முகலாயர்களிடமிருந்து தங்களை பாதுகாக்கவே பெண்கள் பர்தா அணிந்தனர். தற்போது சுதந்திர இந்தியாவில் அதற்கான அவசியம் ஏதும் இல்லை. எனவே பெண்கள் அவற்றை விட்டு வெளிவர வேண்டும்” என்று கூறினார்.

புதிய ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ப்ரதிபா பெண்களின் முன்னேற்றத்திற்காக குரல் கொடுக்கக் கூடியவர் என்பதும், அவர்களின் விடுதலைக்காக பாடுபடக் கூடியவர் என்பதும் அவரின் பர்தாவை குறித்த இக்கருத்துக்களில் இருந்து தெளிவாகிறது.

நாட்டில் பெண்களின் விடுதலைக்கும், முன்னேற்றத்திற்கும் இத்தகைய தலைவர்கள் நாட்டிற்கு தற்போது மிக அவசியம் ஆகும். அவர் ஜனாதிபதியாக தேர்வாக வாழ்த்துவோம்.

இந்தியா, செய்திகள் இல் பதிவிடப்பட்டது . 6 Comments »

தரமான அரசியல்வாதி!

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நெல்லை பொருட்காட்சி மைதானத்தில் நேற்று நடைபெற்ற மண்ணுரிமை மாநாட்டில் கருணாநிதி கலந்து கொண்டு பேசும் பொழுது, “இந்த மாநாட்டில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற வேண்டுமானால் சாதி ஒழிய வேண்டும்” என்று கூறிய கருணாநிதி, “சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கருத்தை வலியுறுத்தி தாம் நாடகம் எழுதியதாக” கூறினார்.

“இந்த கருத்தை வலியுறுத்தி திருமாவளவன் நிறைவேற்றியிருக்கும் தீர்மானத்தின் மீது தம்மால் ஆன நடவடிக்கைகளை எடுப்பேன்” என்றும் முதல் அமைச்சர் கருணாநிதி கூறினார்.

“சாதிகள் ஒழிய வேண்டுமானால் திருமாவளவன் போன்றவர்கள் சம்பந்தப்பட்ட மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்” என்றும் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.

“பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய பெரியார், அண்ணா போன்ற தலைவர்களை அந்த மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால், அவர்களால் சாதி ஒழிப்பில் முழு வெற்றியை அடையமுடிய வில்லை” என்றும் அவர் கூறினார்.

 கடந்த முறைக்கு முந்தைய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அன்று முளையெடுத்த தலைவனை மட்டுமே கொண்ட சாதி கட்சி முதல் மாடன், சுள்ளன், குப்பன் என ஒரு சாதியையும் விடாமல் அனைத்து சாதி கட்சிகளை தேடிப்பிடித்து கூட்டணி வைத்துக் கொண்ட பகுத்தறிவு காவலர் கருணாநிதி பேசும் பேச்சா இது என ஆச்சரியப்படுபவர்கள் அவர் தற்போது ஓர் தரமான இந்திய குறிப்பாக தமிழக அரசியல் களத்தில் கொட்டை போடும் அரசியல்வாதி என்பதை நினைவில் கொள்க.

செய்திகள், தமிழகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

பாகல்பூர் கலவரம் – 14 பேர் குற்றவாளிகள்.

பீகார் மாநிலம் பாகல்பூரில் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராக ஹிந்துத்துவ நாச சக்திகளால் 1989 – ல் கலவரம் நடத்தப்பட்டது. இதில் சிறுபான்மையினர் 116 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவ்வழக்கில் காவல்துறை அதிகாரி மற்றும் கிராம தலைவர் உட்பட 24 பேர் மீது வழக்கு பதிவு செய்து குற்றம்சாட்டப்பட்டது. 18 வருடங்களுக்குப் பிறகு இவ்வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 14 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஷம்புநாத் மிஸ்ரா, இவர்களுக்கான தண்டனை இம்மாதம் 27ம் தேதி அறிவிக்கப்படும் என்றார்.வழக்கின் முடிவு குறித்து கேட்டுக் கொண்டிருந்த குற்றவாளிகளில் ஜெய் பிரகாஷ் மண்டல் என்பவர் நீதிமன்றத்திலிருந்து தப்பியோடி விட்டார். அவரைப் பிடிக்க பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் இந்த சம்பவம் நடைபெற்ற போது ஜக்தீஷ்பூர் காவல்நிலையத்தின் பொறுப்பாளராக இருந்த ராமச்சந்திர சிங் மற்றும் கிராமத்தலைவர் தாக்குர் பாஸ்வான் ஆகியோரும் குற்றவாளிகளே என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்ட 24 பேர்களில் 6 பேர் மரணமடைந்துவிட்டனர். மற்ற நான்கு பேர் தலைமறைவாகியுள்ளனர்.நாட்டில் நடந்த சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்களில் மிக அதிகபட்சமாக குற்றம் சுத்தப்பட்டவர்கள் அனைவருமே குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது இதுவேமுதல்முறை என கருதப்படுகிறது.

இந்தியா, செய்திகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

ஹாலிவுட்டில் நிறவெறி!

ஹாலிவுட் பட உலகை அடக்கி ஆழும் மனிதத்தன்மைக்கு எதிரான நிறவெறி முதன் முதலாக நீதிமன்றத்தில் கேள்விக்குட்ப்படுத்தப்படுகிறது.

2003 ல் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் என்ற சினிமாவில் இணை டைரக்டராக பணியாற்றிய ப்ராங்க் டாவிஸ், தன்னை வேலையிலிருந்து வெளியேற்றிய யூனிவர்ஸல் பிக்ஸர்ஸ் ஸ்டுடியோவின் அராஜக செயலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஸ்டுடியொவின் இச்செயல்பாடு 1964 – ல் இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிரானது என்று அனைத்து சமதொழில் உரிமை கமிஷன் அறிவித்திருக்கின்றது.

இந்த படத்தின் கதாநாயகனாக ஜான் ஸிங்கிள்டன் என்ற மற்றொரு கறுப்பினத்தை சேர்ந்தவர் நடித்திருந்தார். இவர் தான் தனக்கு முந்தைய பல படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி தந்த டாவிஸை சக துணைடைரக்டராக நியமிக்க வைத்தவர். ஆனால் இவருக்கு அதற்கான எவ்வித தகுதியும் இல்லை எனக்கூறி ஸ்டுடியோ டாவிஸை வேலையை விட்டு நீக்கியது.

தன் தோலின் நிறம் தான், தன்னை வேலையை விட்டு நீக்க முக்கிய காரணம் என டாவிஸ் கூறுகின்றார். தனக்கு நிச்சயிக்கப்பட்ட சம்பளமே மற்றவர்களை விட மிகக் குறைவாக இருந்தது என்றும் அவர் கூறினார்.

ஹாலிவுட்டில் நிறவெறி என்பது சர்வசாதாரணமான விஷயம் என்ற போதிலும், பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இதற்கு எதிராக இதுவரை வெளிப்படையாக வந்ததில்லை என்றும் உரிமை போராட்டத்தின் வரலாற்றில் இவ்வழக்கு ஒரு மைல்கல் எனவும் சம உரிமை போராட்ட கழகத்தினர் தெரிவித்தனர்.

வழக்கில் அனைத்து ஆதாரங்களும் டாவிஸிற்கு சாதகமாக இருக்கும் நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு டாவிஸிற்கு சாதகமாக அமையவே வாய்ப்புள்ளது என சம உரிமை போராட்ட கமிஷனின் வழக்கறிஞர் அன்னா பார்க் கூறினார். சமீப காலங்களில் டென்செல் வாஷிங்டன், ஹாலெ பெரி போன்றவர்கள் ஆஸ்கார் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் ஹாலிவுட்டில் நிறவெறி குறைந்து வருவது போன்ற எண்ணத்தை அவை ஏற்படுத்தியிருந்தன. ஆனால், இவையெல்லாம் வெறும் வெளிக்காட்சிகள் மட்டுமே என்பது தற்போது உறுதியானதாக அன்னா பார்க் கூறினார்.

உலகம், செய்திகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

மதமாம், ஜெபமாம், விபச்சாரமாம்!

கம்ப்யூட்டர் மயமான இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் ஒரு விசித்திர சம்பவம் நடந்துள்ளது.

கோவை, பாப்பநாயக்கன்பாளையம், அன்னை இந்திரா நகரில், சொகுசு பங்களாவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் மதபோதகர் சார்லஸ். திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியைச் சேர்ந்த இவர், மின்சாரத்துறையில் உதவிப் பொறியாளராகப் பணிக்குச் சேர்ந்தார். பிறகு குறி, ஜெபம் என்று தன்னை மதபோதகராகக் காட்டிக் கொண்டதில் கையில் காசு புரண்டது. எனவே அரசுப் பணியை உதறினார்.

சார்லஸின் பேச்சில் மயங்கிய பலரும் அவரோடு ஊழியத்தில் (ஜெபத்தில்) இணைந்துகொள்ள, கார் பங்களா என தனது வசதிகளைப் பெருக்கிக்கொண்டார். எப்போதும் தனது காரில் குட்டி, புட்டிகளுடன் வலம் வந்தார்.

fraud.jpg

இந்நிலையில்தான் கடந்த புதனன்று, சார்லஸின் சகோதரர் செல்வக்குமாரின் மனைவி அனுராதா, கோவை ரேஸ் கோர்ஸ் போலீஸில் பரபரப்பு புகார் ஒன்றைக் கொடுத்தார்.
அன்று இரவே அதிரடியாக சார்லஸின் வீட்டுக்குள் நுழைந்து மாடியில் இருந்த பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த போலீஸôர் அதிர்ச்சியில் நிலை குலைந்து போயினர். அங்கே அறை முழுவதும் புழுக்கள் நெளிய, சிதைந்த எலும்புக் கூடாக ஒரு ஆண் சடலம். அது தனது கணவர் செல்வக்குமார்தான் என அனுராதா அடையாளம் காட்ட பரபரப்பு மேலும் கூடியது.

“என்ன நடந்தது?’ என்பதை செல்வக்குமாரின் மனைவி அனுராதாவே நம்மிடம் விவரித்தார்.

“இனி என்னத்த சொல்றது? அண்ணனைப் பார்த்துட்டு வர்றேன்னு போன ஏப்ரல் 2-ஆம் தேதி எங்களை விட்டு வந்தவரு, இப்ப என்னையும் எனது குழந்தைகளையும் அநாதையாக்கிட்டு போய்ட்டாரே” எனக் கதறியவரை நாம் சமாதானப்படுத்திப் பேச வைத்தோம்.

“என் புருஷன் கொஞ்சம் பயந்த சுபாவம். மூனு மாசத்துக்கு முன்னாடி நைட்டு எதையோ பார்த்துட்டு பயந்தவர், வீட்டில் யாருகிட்டேயும் எதுவும் பேசாமல் இருந்தார். அப்பதான், அண்ணனை போய் பார்த்தா சரியாகிடும்னு எங்ககிட்ட சொல்லிட்டு கோயம்புத்தூர் வந்துட்டாரு. அவுங்க அண்ணன் சார்லஸ் ஊழியத்தில் இருக்கிறதால் குணப்படுத்தி விடுவார்னு நம்பிக்கையில அவரை அனுப்பி வச்சோம்.

ஆனா மூனு மாசமாக என் புருஷனை பத்தி எந்தத் தகவலும் இல்லை. அவுங்க அண்ணன் சார்லஸுக்கு ஃபோன் பண்ணி என் கணவரைப் பத்திக் கேட்டா, வெளியூர் போயிருக்கான், ஒரு ஊழியத்துல இருக்கான்னு சொல்லியே எங்களை சமாளிச்சுட்டு வந்தாரு.

இதனால எங்களுக்கு சந்தேகம் வந்து, போன புதன்கிழமை உறவினர்களோடு கோவை வந்தேன். சார்லஸ் வீட்டுக்கு போனப்ப வீடு பூட்டிக் கிடந்தது. கீழ் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் வின்சென்ட், அக்கம் பக்கத்துல கேட்டப்ப யாரும் எந்த பதிலும் சொல்லலை. அப்ப நான் மாடிக்கு போனேன்.

அங்கே ஒரு விதமான வாடை வீசியது. சந்தேகமடைந்து போலீஸுக்குச் சொன்னோம். அவுங்களும் வந்து கதவை உடைச்சு பார்த்தப்போ சார்லஸ் தனது மனைவி, குழந்தைகளுடன் கட்டில் அருகில் அமர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தார். எனது கணவர் செல்வக்குமார் கட்டிலில் உடல் அழுகி இறந்து கிடந்தார். பாவிப்பய ஊழியம் செய்யுறேன்னு சொல்லி என் புருஷனை கொன்னுட்டான்” எனக் கதறினார் அனுராதா.

இதையடுத்து அருகிலிருந்த செல்வக்குமாரின் மைத்துனர் சாமுவேல் துரைராஜ் நம்மிடம், “ஊழியம் பண்றேன், ஜெபம் பண்றேன்னு சொல்லிட்டு மக்களை ஏமாற்றி காசு வாங்குறதுதான் சார்லஸ்சோட வேலையே…! குடும்பப் பிரச்சினைன்னு சொல்லி யாராவது இவன்கிட்ட வந்தாங்கன்னா குடும்பத்தை நிரந்தரமா பிரிப்பதோடு, பொம்பளைகளை தன் பக்கம் சேர்த்துக்குவான். அப்புறம் அவுங்களை தன்னோட “ஊழியத்துக்கு’ பயன்படுத்திக்குவான். எப்பவுமே சார்லஸோட ஐந்து, ஆறு பொண்ணுங்க இருப்பாங்க.

அவுங்களை எங்க எங்கேயோ கூட்டிட்டுப் போவான். ஜெபம் என்ற பெயர்ல இவன் விபச்சாரத் தொழில் செய்றானோன்னு சந்தேகம் எங்களுக்கு இருக்கு. ஏன்னா இவனோட கௌரி, இந்திரான்னு ரெண்டு பொம்பளைங்க எப்பவும் கூடவே இருப்பாங்க. இவங்களோட மோசமான தொழில் பற்றி அந்த ஏரியாவுக்கே தெரியும். இவங்களை புடிச்சு போலீஸ் விசாரிச்சா எல்லா உண்மையும் தெரிஞ்சிடும்…
போலீஸ் சொல்ற மாதிரி இவன் சைக்கோவெல்லாம் கிடையாது. கிரிமினல்… மச்சான் தூக்குப்போட்டு தற்கொலை செய்யுற அளவுக்கு கோழை அல்ல, அவரை கொலை பண்ணியிருப்பாங்களோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு… இந்த சார்லஸ் பத்தின முழு விவரத்தையும் போலீஸ் விசாரிக்கணும். அப்பதான் உண்மை தெரியும்” என்றார்.

இதற்கிடையே போலீஸ் பிடியில் இருந்த மதபோதகர் சார்லஸ் தனது வாக்கு மூலத்தில், “ஏப்ரல் 6-ஆம் தேதி பிரார்த்தனைக்காக நான் வெளியூர் போய்ட்டேன். அப்ப வீட்டில் தனியா இருந்த என் தம்பி செல்வக்குமார் மனபயத்தால் மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தை என் மனைவி எனக்குச் சொன்னார். இயேசுவின் ஆணையின் பேரில் அவர் மீண்டும் உயிர்த் தெழுவார் என்ற நம்பிக்கையில் இறந்த எனது தம்பியை மீண்டும் உயிர்ப்பிக்க ஜெபம் செய்தோம். 90 நாட்களில் தம்பியை உயிர்ப்பித்து இருப்பேன். உடல் அசைந்து தம்பி உயிர்த் தெழுவதற்கான காலகட்டம் வந்த நிலையில்தான் போலீஸாரும், தம்பி குடும்பத்தினரும் கெடுத்து விட்டனர். தம்பியின் ஆவியுடன் பேசியதில் அவனது கை, கால்களில் அசைவு தெரியத் துவங்கியது. அதற்குள் அவனை உயிர்ப்பிக்க முடியாமல் சாகடித்துவிட்டனர்” என கேஷுவலாக சொல்ல போலீஸாரே அதிர்ச்சியடைந்துவிட்டனர்.

இந்நிலையில் அறுபது நாட்களாக பிண வாடை அக்கம் பக்கம் தெரியாமல் இருக்க, கெமிக்கல்களையும், அறையில் காற்று புகாத வண்ணம் அடைப்புகளையும் ஏற்படுத்தி யாருக்கும் சந்தேகம் வராமல் செய்திருக்கிறார் சார்லஸ். தற்போது சுகாதார சீர்கேடு விளைவித்தல், இறப்பு பற்றி போலீஸுக்கு தகவல் கொடுக்காமல் மறைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் மத போதகர் சார்லஸ், அவரது மனைவி சாந்தி, வின்சென்ட், அவரது மனைவி ஜெயசீலி, உறவினர் ஜான்சன் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்துள்ள போலீஸ் இவர்களின் பின்னணி பற்றியும் தீவிரமாக விசாரித்து வருகிறது.

படித்தது

செய்திகள், தமிழகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

ஆப்கன் காவல்துறையினருக்கு யு.எஸ்ஸின் அன்பு பரிசு!

கிழக்கு ஆப்கானிஸ்தான் பிரதேசமான நன்கார்ஹரில் ஏழு ஆப்கானிஸ்தான் காவலர்களை கடந்த திங்கள் கிழமை இரவு அமெரிக்க படையினர் சுட்டுக் கொன்றனர்.  அமெரிக்க-ஆப்கன் கூட்டு படையினர் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததை தொடர்ந்து எதிர்த்து சுட்டதில் இவர்கள் இறந்ததாக அமெரிக்க படையினர் தெரிவித்தனர்.

ஆனால் இறந்தவர்கள் ஆப்கானிஸ்தான் காவலர்கள் என்பதை இதுவரை அமெரிக்க படை உறுதிபடுத்தவில்லை. ஆனால் அதே சமயம் நான்கஹார் பகுதியில் உள்ள ஒரு செக்போஸ்டின் மீது எவ்வித காரணமும் இன்றி அமெரிக்க இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆப்கான் காவல்துறை அமெரிக்க இராணுவத்தின் மீது குற்றம் சுமத்தியது.
அமெரிக்க தரைப்படையினரின் தாக்குதலுடன் ஆப்கான் காவல்துறையினர் மீது அமெரிக்க விமானப்படையும் குண்டுகளை பொழிந்ததாக முதிர்ந்த காவல்துறை அதிகாரி நஸிர் அஹமது கூறினார். அமெரிக்கப்படையினரின் இச்செயல் கொடூரமானது என்றும் அவர் கூறினார். துக்ககரமான விபத்து என இச்சம்பவத்தை ஆப்கான் அதிபர் கர்ஸாயின் செய்தி தொடர்பாளர் கரீம் ரஹீமி தெரிவித்தார்.

மற்றொரு சம்பவத்தில் குனார் பிரதேசத்திலும் மேற்கு ஆப்கானிஸ்தானிலும் பொது மக்களில் மூன்று பேரை நேட்டோ படை சுட்டுக் கொன்றது. செக்போஸ்டில் வாகனத்தை நிறுத்தாதை தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தியதாக நேட்டோ படை இதற்கு காரணம் கூறியது. கடந்த ஏப்ரல் மாதம் பொதுமக்களில் 50 பேரை நேட்டோ படை சுட்டுக் கொன்றதை தொடர்ந்து, இது போன்ற நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என நேட்டோ மற்றும் அமெரிக்க படையினரிடம் அதிபர் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம், செய்திகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »