தீப்பிடிக்கத் தீப்பிடிக்க என்னைத் தொடுடா…!

“இலக்கியங்கள் சொல்லும் காதல் பெரிய ஏரியா. அது ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. அதை விட்டு விட்டு விஞ்ஞானம் என்ன சொல்கிறது என்று மட்டும் பார்ப்போமா? ஒரு ஆணும் பெண்னும் சந்திக்கும் போது காதல் தோன்றுவதற்கு முன்னால், அட்ரினலினைப் போன்ற ரகளையான ரசாயனம் நரம்புகளின் வழியே ஒரு பூகம்பம் போல் வெடித்துக் கிளம்புகிறது. (இதைத்தான் `ஒரு வித்தியாசமான ஃபீலிங்’ என்கிறார்கள் காதலர்கள்) ஃபினைல்தைலமைன் என்கிற ரசாயனம் (காதலிகளுக்கு விருப்பமான சாக்லேட்டில் இது நிறைய உண்டு) அப்போது நரம்பு செல்களுக்கிடையே ரொமான்டிக்கான செய்திகளைப் பரப்புகின்றது. இதனுடன் டோபோமைன் மற்றும் நோர்பைன்ஃபரைன் போன்ற உற்சாக ரசாயனங்களும் கை கோர்த்துக் கொள்ள, அட்ரினலின் சுரந்து இதயம் ஏகாந்தமாய் உணர்ந்து படபடவென்று அடித்துக் கொள்கிறது. ஆண் பெண்ணுக்கிடையே காதல் தொடர்ந்து நீடிக்க ஆக்ஸிடோசின் என்கிற ரசாயனம் பெரும் உதவி செய்கிறது என்பதும் ஆச்சர்யமான செய்தி. இந்த கெமிக்கல் ரியாக்ஷன் எந்த ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயும் எப்போதும் தோன்றலாம். மற்றபடி கள்ளக்காதல் என்பதெல்லாம் நம்முடைய தமிழ் தினசரிகள் கண்டுபிடித்த கெட்ட வார்த்தை”

அரசு பதிகள் — குமுதம் 01/10/2008 இதழ்

மேலும்…

நன்றி: இந்நேரம்.காம்

காதல், சிந்தனைகள் இல் பதிவிடப்பட்டது . 1 Comment »

போட்டி – குஷ்பு, பாட்டீல், லெஸ்பியன் ஜோடி!

  pratibha.jpg

kushboo.jpglesbian1.jpg

மேற்கண்ட இம்மூன்று படங்களுக்கிடையில் ஓர் ஒற்றுமை உள்ளது.

சித்திரம் சொல்லும் செய்தி என்ன?

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

சிந்தனைகள், போட்டிகள் இல் பதிவிடப்பட்டது . 5 Comments »

ஆங்கில புலமையுடையவர்களுக்கு திமுகவில் எம்.பி பதவி!

மேடைகளிலும், சினிமாக்களிலும் அரைகுறை ஆடையில் தமிழக மக்களுக்கு நாட்டிய விருந்து படைத்த ஒரே தகுதியினூடாக அ.தி.முக தலைமை பதவியை வகிக்கும் செல்வி(?!) ஜெ.ஜெயலலிதா அவர்கள், தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் வழங்கப்பட்டது எந்த தகுதியின் அடிப்படையில் என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளிக்கும் போது திமுக மகளிரணி பிரமுகரான கவிஞர் விஜயா தாயன்பன் கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“முதல்வர் கருணாநிதி, தமிழகத்திற்கும், தமிழ் மொழிக்கும், திராவிட இயக்கத்திற்கும் செய்த தியாகமும், உழைப்பும் அளவிட முடியாதது.

அதனால் முதல்வர் கருணாநிதியின் மகள் என்ற தகுதி மட்டும் கனிமொழிக்கு போதுமானது என்றாலும், அவர் நன்கு படித்தவர், நல்ல கவிஞர். ஆங்கிலத்தில் புலமை வாய்ந்தவர். மாநிலங்களவை உறுப்பினராவதற்கான அனைத்து தகுதியும் அவரிடம் இருக்கிறது” 

ஆகவே ஆங்கில புலமை வாய்ந்தவர்கள் உடனடியாக தமிழுக்காகவும், தமிழின வளர்ச்சிக்காகவும் தனது வாழ்நாளையே செலவழித்துக் கொண்டிருக்கும் கலைஞரிடம் உடனடியாக மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக விண்ணப்பிக்கலாம்.

அப்பாடா, அப்படியாவது பாராளுமன்றம் கிரிமினல்களிடமிருந்தும், நாட்டிய, ஆபாச பரதேசிகளிடமிருந்தும், ரவுடிகளிடமிருந்தும் விடுதலை அடைகின்றதா எனப்பார்ப்போம்.

கொடுமை – கின்னஸ் படுத்தும்பாடு!

 பணபைத்தியங்களைகேள்விப்பட்டிருப்பீர்கள். இதுபுகழ்பைத்தியங்களைக்குறித்தது.

கீழேகாணும் படத்தை பாருங்கள் – வெறும் 15 மாதமே ஆன பச்சிளங் குழந்தையை தண்ணீரில் போட்டு கொடுமைப்படுத்துவதை.

ginnus.jpg
சென்னை, திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெருவை சேர்ந்த தம்பதி கமலாகர், விஜயலட்சுமி. இவர்களது மகன் மஹாரந்த் கமலாகர். பிறந்து 15 மாதங்களே ஆன இந்த பச்சிளங் குழந்தையை கின்னஸில் இடம் பிடிக்க வைக்க வேண்டும் என்பதற்காக விஜயலட்சமியின் தம்பி அருண் பாலாஜியிடம் நீச்சல் பயிற்சி எடுக்க வைத்து வருகின்றனர்.

சென்னை காஸ்மோபாலிடன் கிளப்பில் நேற்று மாலை கின்னஸில் இடம் பிடிப்பதற்காக இப்பச்சிளங் குழந்தையை வைத்து பாலாஜி முயற்சி மேற்கொண்டார். இந்த கொடுமையை பார்க்க பலர் அங்குள்ள நீச்சல் குளத்தின் முன் கூடியிருக்கின்றனர். குழந்தை மஹாரந்த் நான்கு மீட்டர் தூரம் மூச்சடைத்து நீந்தியதைப் பார்த்து கூடியிருந்தவர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

குழந்தையின் தாயார், “ஆஸ்திரேலியாவில் இரண்டரை வயது குழந்தை ஒன்று தண்ணீரில் கை, கால்களை அசைத்து மிதப்பதை பார்த்தோம். அப்போது எங்களுக்கு மஹாரந்த்தையும் குறைந்த வயதில் நீந்த வைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவனுக்கு ஒரு வயது ஆன போது நீச்சல் குளத்தில் தண்ணீரில் போட்டோம். அவன் அழவில்லை. நீச்சலடிப்பதில் அவனிடம் முன்னேற்றம் தெரிந்தது. இதையடுத்து அவனுக்கு பயிற்சியளித்து வருகிறோம். தினசரி ஒரு மணி நேரம் பயிற்சி மேற்கொள்வான். எனது மகன் சிறந்த நீச்சல் வீரனாகி, பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு விருதுகள் பெற வேண்டும் என ஆசைப்படுகிறேன்.” என்று கூறினார்.

புகழ் மயக்கம் இப்படியா தாய்மையையும் பலி கொள்ளும்?

சிந்தனைகள், செய்திகள், தமிழகம் இல் பதிவிடப்பட்டது . 6 Comments »

கலைஞர் கருணாநிதியும் நானும்.

கலைஞர் : பிறந்த நாள் விழா கொண்டாடப்படுவது மகிழ்விப்பதற்காக அல்ல.

நான் : அப்படியா? வேறு எதற்காகவாம்?

கலைஞர் : ஒருவர் கொண்ட கொள்கையை பின்பற்றி நடப்பதற்காகவும் தான்.

நான் : அட இது தெரியாமல் போயிற்றே. இது நமது புது தத்துவமா?

கலைஞர் : நாம் ஏற்கனவே உள்ள தத்துவத்தை முடித்து விட்டு தான் புதிய தத்துவத்திற்குள் நுழைய வேண்டும்.

நான் : அப்படியெனில் புதிய தத்துவம் எப்பொழுது கிடைக்கும்?

கலைஞர் : ஏற்கனவே, உள்ள தத்துவத்தை நிறைவேற்றும் பணிகளை முடியுங்கள். புதிய தத்துவத்தை தருகிறோம்.

நான் : ஏற்கனவே, உள்ள தத்துவத்தை நிறைவேற்ற நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

கலைஞர் : ஏற்கனவே, உள்ள தத்துவத்தை நிறைவேற்ற, மக்களிடத்தில் நம் கொள்கைகளை இன்னும் ஆழமாக கொண்டு செல்ல வேண்டும்.

நான் : சரி. அப்படியே செய்கிறோம். ஆனால் ஒரு சந்தேகம். நமக்கென அப்படி ஏதாவது தனியாக கொள்கைகள் இருக்கின்றதா என்ன? ஒரு உதாரணம் கூறுங்களேன்.

கலைஞர் : தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு உருவாக்கிட பாடுபட்டோம்.

நான் : அப்படியா? ஆச்சரியமாக உள்ளது! இந்த வெட்டிவேலையை நாம் எப்பொழுது செய்தோம்?

கலைஞர் : நீதிக்கட்சியாக இருந்த போதும் அதுமாறி பின்னர் திராவிடக் கட்சியாக உருவாகிய போதும் இக்கொள்கைகளை பரவலாக்கி இன்னும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

நான் : (மனதினுள் – அது தான் மத்தியிலும் மாநிலத்திலும் குடும்பத்தினர்களை நுழைக்க அல்லும்பகலும் பாடுபட்டு கொண்டிருப்பது தெரிகிறதே!) ஓ! ஆமாம், ஆமாம். மறந்தே போய் விட்டது!

கலைஞர் : பிறந்தநாள் செய்தியாக நான் மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் வரவேண்டும் என்று கூறியுள்ளேன்.

நான் : பேஷ் பேஷ். ஆஹா! அப்படித்தான் பிரம்மாதம். மத்திய அரசை கதிகலங்க அடித்து விட்டீர்கள் தலைவா!(மனதினுள் – ஆமாம், இப்படியே காலத்தை ஓட்டி விடும். பின்னர் இளைய வாரிசு முன்னெடுத்து செல்லும். அப்படியே இன்னும் ஒரு 100 வருடம் ஓட்டி விடலாம். அடுத்த ஒரு 100 வருடத்திற்கு தமிழன்களை முன்னேற விடுவதாக உத்தேசமே இல்லை போலிருக்கிறது. விளங்கியது போல் தான்.)

கலைஞர் : மேலும், இந்திய நதிகளை ஒன்றிணைக்க வேண்டும்.

நான் : அது நடக்குமா தலைவா?கங்கைகாவிரியில் இணையும் முன் இணைக்க கூறுபவர்கள் இந்தியாவை விற்று விடுவார்களே!( மனதினுள் – ஓ! அவசரப்பட்டு வார்த்தையை விட்டு விட்டேனே. கடவுளே நான் கூறியதை இவர் புரிந்து கொள்ளாமல் இருக்க வேண்டுமே!)

கலைஞர் : கங்கையையும் காவிரியையும் இணைப்பது என்பது கடினம் தான். முதலில் தீபகற்ப நதிகளையாவது ஒன்றிணைக்க வேண்டும். கோதாவரி கங்கை, கோதாவரி காவிரி நதிகளை ஒன்றிணைக்க வேண்டும்.

நான் : (மனதினுள் – அப்படி போடு.நம்மிடமே இப்படி இரட்டைநாக்குடன்பேசுபவர்மக்களிடம் எப்படியெல்லாம் பேசுவார்! யப்பாஆ ஜகஜால கில்லாடி தான் டோய். எப்படியோ நான் சொன்னதை புரிந்து கொள்ளவில்லை. தப்பித்தேன்.) தலைவா, அதுகூட நடக்குமா?(இதுக்காவது ஒழுங்கா ஏதாவது ஐடியா வைத்திருப்பாரா?)

கலைஞர் : மாநிலங்களுக்கு இடையில் உள்ள நதிகளை ஒன்றிணைக்க வேண்டும்.

நான் : (என்ன இது? இப்படி ப்ளேட்டை மாத்தி போடுறார்?) தலையை சொறிந்து கொண்டே… தலைவா, இதாவது நடக்குமா?

கலைஞர் : தென்னக நதிகளையாவது இணைக்க வேண்டும்.

நான் : (யப்போய். தல சுத்துதே!)

கலைஞர் : (என் நிலையை கண்டு கொள்ளாமல் தொடர்கிறார்) இதற்காக மாநாடுகளை போட்டு அதில், மாநில நீர்பாசனத் துறை அமைச்சர்கள் மற்றும் முதல்வர்களை மற்றும் பிரதமரை அழைத்து ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும்.

நான் : (யார் அழைப்பதாம். நடக்காது என்பதை சூசகமாக தெரிவிக்கிறாரோ?) இவ்வளவு கஷ்டப்பட்டு இதெல்லாம் எதற்காக தலைவா?

கலைஞர் : அப்போதுதான் நாட்டின் வளம் பெருகும்.

நான் : (ஆகா! நாட்டின் வளத்தை விட குடும்ப வளத்தை பெருக்குவது தான் தன் உத்தேசம் என்பதை எவ்வளவு தெளிவாக கூறுகிறார்.)

கலைஞர் : எல்லா மாநிலங்களும் பயன் பெறும். அதற்கு ஆவண செய்ய வேண்டும்.

நான் : (யார்? பிரதமரையும் அழைத்து ஒப்பந்தம் போட இவர் யாரிடம் தான் கோரிக்கை வைக்கிறார்? ஒரு மண்ணும் புரியலப்பா.) சூப்பர் தலைவா. நம்மோட பழைய கொள்கைகள்ல மேலும் ஒண்ணு கூட சொல்லுங்களேன்.

கலைஞர் : கொள்கைஅளவில் ஆந்திரா, வங்காளம் மற்றும் தமிழக அரசுகள் மதச்சார்பற்ற அரசுகளாக இருக்க வேண்டும்.

நான் : அது என்ன இந்த மூன்று மாநிலத்தை மட்டும் குறிப்பிட்டு கூறுகின்றீர்கள்? அப்படீன்னா மற்ற மாநிலங்களும், மத்தியிலும் மதசார்புள்ள அரசு அமையலாமா?

கலைஞர் : மத்தியிலும் மாநிலங்களிலும் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும்.

நான் : (வயசாயிட்டாலே இப்படித்தானோ? மனுசன் இப்படி நிமிட நேரத்துல நிறம் மாறுராரே!) அருமை தலைவா!

கலைஞர் : நாம் தான் மதச்சார்பற்ற அரசிற்கு அடிக்கல் நாட்டினோம்.

நான் : (நாட்டல, புடுங்கினீங்க. அண்ணாவின் பகுத்தறிவு பாசறைன்னு அடிக்கடி குரல் குடுத்துட்டு மனுசன் இப்படி கேப்புல மஞ்சத்துண்டு, அடிக்கலுன்னு பினாத்துறாரு. மஞ்சத்துண்டு, அடிக்கல் எல்லாம் மதசார்பின்மையின் அடையாளமோ?) ஆமாம் தலைவா!

கலைஞர் : நம்மால் வளர்க்கப்பட்ட இயக்கம் பெற்றுள்ள வலிமையான இளைஞர் பட்டாளத்தை கொள்கைகளை ஏற்றுக்கொள்ள அடித்தளத்தை ஏற்படுத்த வேண்டும்.

நான் : (அப்பாடா. முதன்முதலா ஒரு உண்மையை போட்டு ஒடச்சிட்டார். ஆமா, கொள்கைன்னா என்னன்னே தெரியாம இருக்குற உடன்பிறப்புகளுக்கு இடையில், இப்படி நிமிட நேரத்தில் மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருந்தால் எந்த உடன்பிறப்பு தான் கொள்கையை பற்றி கவலைப்படும்?) நம் இளைஞர் பட்டாளம் ஒரு சுத்தமான கொள்கை பட்டாளம் தலைவா. இது கொள்கைக்காகவே ஒன்று கூடிய பட்டாளம் தலைவா! நீங்க சொன்னா எல்லாம் சரியாத்தான் இருக்கும் தலைவா!

கலைஞர்: பழைய தத்துவத்திற்கு புதிய பலத்தை தரவேண்டும்.

நான் : (புரியலியே. ஒருவேளை கம்பு, தடி, அரிவாள்களை விட்டுவிட்டு துப்பாக்கி, குண்டு போன்றவற்றை கையில் எடுக்க வேண்டும் என்கிறாரோ?) கண்டிப்பாக தலைவா! நீங்கள் சொல்லுங்கள். நாங்கள் செய்கின்றோம்.

கலைஞர் : வாய்மை, தூய்மை இரண்டையும் முக்கிய கொள்கையாக நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

நான் : (ஆமா, கொள்கைகளை கடைபிடிக்க கூறும் பொழுது “நாம்” என அனைத்திற்கும் கூறிவிட்டு, இந்த இடத்தில் மட்டும் கவனமாக “நீங்கள்” என குறிப்பிடுகிறார். பழம் தின்னு கொட்டைப் போட்டவர் என்பது எவ்வளவு சரியானது!) அப்படியே ஆகட்டும் தலைவா!

கலைஞர் : அரசியலில் நாம் ஆற்றும் பணிகளை மற்றும் ஓராண்டு சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்.

நான் : (கனிமொழியை டெல்லிக்கு அனுப்பியது, மதுரைக்கு தெற்கே அழகிரிக்கும் வடக்கே ஸ்டாலினுக்கும் எழுதிக் கொடுத்துள்ளது, கள்ள ரயில் ஏறி சென்னை வந்தவர் இன்று ஆசியாவிலேயே இரண்டாவது பணக்காரராக ஆனது எப்படி என்பது போன்றவற்றையும் மக்களிடம் எடுத்துக் கூறவா?)இலவச டிவி, அரிசி, வேட்டி, சேலை எல்லாத்தையும் நிச்சயமா எடுத்துச் சொல்றோம் தலைவா.

கலைஞர் : இந்தியாவை வலிமைப்படுத்தும் திட்டமாக சேது சமுத்திர திட்டம் உள்ளது. இந்த திட்டத்தை தடுக்க மதவாத சக்திகள் முயற்சி செய்து வருகின்றன.

நான் : (மதவாத்தின் வரையறை என்ன? குல்லாய் போட்டவர்களின் நண்பன், மஞ்சள் துண்டு, அடிக்கல் இதெல்லாம் மதசார்பின் அடையாளங்கள் இல்லையா?) ஆமாம் தலைவா!

கலைஞர் : ராமர் கோவிலுக்காக பாபர் மசூதியை இடித்தவர்கள், இன்று சேது சமுத்திர திட்டத்தை எதிர்க்கின்றனர்.

நான் : (ஸ்டாலினுக்காக அழகிரியையும், கனிமொழிக்காக தயாநிதியையும், குடும்பத்திற்காக கட்சியையும், ஆட்சிக்காக கொள்கையையும் இடித்து தரைமட்டம் ஆக்கியதை விடவா?) அவர்களுக்கு எதிராக போராடுவோம் தலைவா.

கலைஞர் : இத்திட்டம் நிறுத்தப்படடால் இந்தியாவின் வடபகுதி வாழும்.தென்பகுதி தேயும் நிலை ஏற்படும்.

நான் : (ஓ சங்கதி அப்படிப்போகுதா? சரி அப்படியாவது சிங்கிள் டீக்கு லாட்டரி அடித்து, கள்ள ரயில் ஏறி சென்னை ப்ளாட்பாரத்தில் அலைந்து திரிந்த ஆசியாவின் இரண்டாவது பணக்காரர் தேய்கிறாரான்னு பாக்கலாமே) ஆம். இது தமிழையும் தமிழ்நாட்டை அழிக்க வடமொழியினர் செய்யும் சதி தான் தலைவா.

கலைஞர் : திட்டம் நிறைவேற்றப்பட்டால் தென்பகுதி மிகச் சிறந்த வளர்ச்சி நிலைக்கு மாறும்.

நான் : (அது மாறுகிறதோ என்னமோ, ஆசியாவின் டாப் 10 ல் முதலிடத்திற்கு இவர் மாறிவிடுவார்.) அதன்மூலம் தமிழை உலகெங்கும் பரப்பலாம்.

கலைஞர் : பல நன்மைகளை பெறும்.

நான் : (யார்? புரியுது) எனவே தமிழ் வாழ்க!

கலைஞர் : இத்திட்டத்தை எதிர்க்கும் மதவாத சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

நான் : எனவே எல்லோரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள். (ஆமா வேற என்ன சொல்லப்போறார்? தேவையெனில் அவர்கள் திருந்திவிட்டதாக கூறி கூட்டு வைக்கவும் தயங்கமாட்டாரே. நோக்கம் நாற்காலி மட்டும் தானே. ம் வாழுங்கள். ஆசியா டாப் 10 ஆக வாழ்த்துக்கள்)

கலைஞர் : மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும்.

நான் : (போட்டாரு பாரு போடு. இதுதான் ஹைலைட். எவ்வளவுதெளிவா இப்ப மத்தியில் ஆட்சியில் இருக்கிற காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு மதச்சார்பற்ற அரசு இல்லை என்று வாக்குமூலம் தருகிறார். சம்மதிக்க வேண்டும் அய்யா இவரின் தைரியத்தை.) ஆம். அதற்கு நாம் தற்போது போன்று நிபந்தனையற்ற ஆதரவு அளிப்போம்.

புரியாமல் தலையை பிய்ப்பவர்களுக்கு மட்டும்.

சிந்தனைகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

அயோத்தியில் மசூதி கட்ட அத்வானி கோரிக்கை?!

மும்பை புறநகர் ரயில்களில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி தொடர் குண்டுகள் வெடித்தன. அந்த சம்பவத்தில் 187 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; பலர் படுகாயமடைந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவர்களில் பரக் சவந்த் மற்றும் அமித் சிங் என்னும் இருவர் இன்னும் “கோமா’ நிலையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களுடைய குடும்பத்தினரை பா.ஜ.க முன்னாள் தலைவர் அத்வானி நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதன் பிறகு, நிருபர்களிடம் அத்வானி பேசுகையில், “மத்திய அரசு, ரயில்வே துறை மற்றும் மாநில அரசு இணைந்து, குஜராத், கோவை, மும்பை, மாறாடு முதலிய கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி மற்றும் மறுவாழ்வு அளிக்க விரைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இன்னும் பலருக்கு நிவாரண உதவி கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர். இந்த சம்பவம்கள் நடந்து பல 11 மாதங்கள் கடந்தும், வழக்கு விசாரணைகள் முடியாமல் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. அதனால், இவ்வழக்குகளை விரைவாக முடித்து, எங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும்’ என்றார். மேலும், “எங்களால் இடிக்கப்பட்ட இந்தியவரலாற்றுசின்னம் பாபர் மஸ்ஜிதை திரும்ப எழுப்பவும் நாட்டில் அமைதி ஏற்பட ஆர்.எஸ்.எஸ் உட்பட அனைத்து தனியார் மத/இன அமைப்புகளை தடை செய்யவும் மத்திய அரசும் உச்சநீதி மன்றமும் ஆவன செய்ய வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

அடவேற ஒண்ணுமில்லீங்க. அத்வானிஜி தனது கடைசி காலத்தில், உண்மையிலேயே இந்திய நாட்டின் மீது பற்று கொண்டு பேட்டி கொடுத்தால் எப்படி இருக்கும் என நினைத்துப் பார்த்தேன். அவ்வளவு தான்.

ஆர்.எஸ்.எஸ், சிந்தனைகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

டேட்டிங் பெயரில் செக்ஸ் வியாபாரம்-சீனா அதிரடி!

“டேட்டிங் வெப்சைட் என்ற பெயரில், செக்ஸ் வியாபாரம் நடந்து வருகிறது” என்று, 12 “டேட்டிங் வெப்சைட்’கள் மீது, சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. வெப்சைட்களை கண்காணிக்க, சீனாவில் ஒரு அமைப்பு உள்ளது. தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த அமைப்பு, எல்லா வெப்சைட்களையும் அலசி, சிலவற்றை தடை செய்ய பரிந்துரை செய்கிறது. “டேட்டிங் வெப்சைட்’கள் எல்லாவற்றையும் அலசிய இந்த அமைப்பு, “12 வெப்சைட்களை தடை செய்ய வேண்டும்’ என்று பரிந்துரை செய்துள்ளது. “இந்த வெப்சைட்களில், டேட்டிங் தொடர்பான தகவல்களை விட, விபசாரத்துக்கு வழி வகுக்கும் தகவல்கள் தான் அதிகம் உள்ளன. உண்மையில், இவை விபசாரத்துக்கு துணை போகின்றன’ என்று கண்டித்துள்ளது. வெப்சைட்களில், பெண்களின் படங்களையும் போட்டு, “டேட்டிங்’ விவரங்களை கொடுத்துள்ளன. “நாங்கள் டேட்டிங் தொடர்பான விவரங்களை தான் தந்துள்ளோம். ஆனால், சீன அதிகாரிகள், அவற்றை, விபசாரம் தொடர்பான தகவல்கள் என்று தவறாக நினைக்கின்றனர்’ என்று, வெப்சைட்கள் தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது. “ஆட்சேபனை தெரிவிக்கப்பட்ட தகவல்கள், படங்கள் எல்லாவற்றையும் அப்புறப்படுத்தி விட வேண்டும். அப்படி செய்தால் வெப்சைட்கள், சீனாவில் பார்க்க அனுமதிக்கப்படும்’ என்று குழு இறுதியாக எச்சரித்து, கெடு விதித்துள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்குள், திருத்தம் செய்யாவிட்டால், இந்த வெப்சைட்களை தடை செய்ய, சீன அரசு திட்டமிட்டுள்ளது.

சீனாவில், ஏற்கனவே, பல வெப்சைட்களை பார்க்க முடியாமல் செய்துள்ளது இந்த கண்காணிப்பு குழு. அதிலும், கிளுகிளு வெப்சைட்கள் பலவற்றுக்கு தடை விதித்துள்ளது. – செய்தி.

“கிளுகிளு வெப்சைட்கள்” என்பதற்கு என்ன இலக்கணம்?

அரைகுறை ஆடையில் அங்கங்களை வெளிக்காட்டி கொண்டிருக்கும் பெண்களின் புகைப்படங்களை வெளியிடும் வெப்சைட்டுகளும் இந்த “கிளுகிளு வெப்சைட்கள்” பட்டியலில் அடங்குமா? எனில்,

தமிழ் வலையுலகிலும், பத்திரிக்கையுலகிலும் எத்தனை வெப்சைட்கள் மற்றும் பத்திரிக்கைகள் தடைசெய்யப்பட வேண்டும்.

ஏன் அந்தவகையில் பார்த்தால் இந்த செய்தியை வெளியிட்டுள்ள தினமலரே ஒரு “கிளுகிளு வெப்சைட் கம் பத்திரிக்கை” தானே?

என்னமோப்பா ஒண்ணுமே புரியல!

உலகம், சிந்தனைகள், செய்திகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

வெட்கம் இல்லாதது எது?

என்னய்யா இது? யாராவது தெரிஞ்சவய்ங்க கொஞ்சம் வெலக்கி தாங்கய்யா. சின்னப்புள்ள நானும் தெரிஞ்சி வச்சிக்கிடறேன்!

ஆன்மீகம், கழிவுகள், சிந்தனைகள் இல் பதிவிடப்பட்டது . 1 Comment »

பகுத்தறிவு கிலோ என்ன விலை?

அண்ணாவின் பாடசாலையில் பகுத்தறிவு பயின்று வந்த இருபெரும் திராவிட கழகங்களான தி.மு.க மற்றும் அ.தி.மு.க கழக பகுத்தறிவு சிங்கங்கள், தங்கள் பகுத்தறிவை காயிதேமில்லத்தின் கல்லறையில் புதைப்பதை பாருங்கள்.

kayide dmk

kayide21.jpg

இதில் எடுத்துக் கூற வேண்டிய மிகப்பெரிய காமடி என்னவெனில், கடவுளுக்கு உருவமே இல்லை எனக் கூறி தங்களை பகுத்தறிவுவாதிகளாக காட்டிக்கொள்ளும் இசுலாமியர்களே இங்கே குழுமி நின்று சமாதியை கும்பிடுவதும், வணங்குவதும் தான்.

எல்லாமே அரசியல் படுத்தும் பாடு; இதில் பகுத்தறிவுக்கு எங்கே வேலை?

சிந்தனைகள் இல் பதிவிடப்பட்டது . 10 Comments »

பத்திரிக்கைகள் பாராட்டும் முன்மாதிரி இந்திய பெண்??!!??

sunitha.jpg

அமெரிக்கா ரஷ்யா உள்பட பல்வேறு நாடுகள் விண்வெளியில் உருவாக்கி வரும் சர்வதேச மிதக்கும் ஆய்வுக்கூடத்தில் இந்திய வீராங்கனை(அன்னிய நாட்டுக்காக – அதுவும் அமெரிக்காவுக்காக உழைப்பதில் தான் நாட்டுக்கு பெருமையே உள்ளது?!!) சுனிதா வில்லியம் கடந்த 6 மாதங்களுக்கு மேல் தங்கி இருந்து ஆய்வு நடத்தி வருகிறார்.

 

அவரை பூமிக்கு அழைத்து வரவும் புதிய தளவாடங்களை ஆய்வுக்கூடத்துக்கு கொண்டு செல்லவும் அட்லாண்டிஸ் என்ற ராக்கெட்டை நாசா நிறுவனம் 8-ந்தேதி (இந்திய நேரப்படி 9-ந்தேதி காலை 5மணி) அனுப்புகிறது.

 

7 விண்வெளி நிபுணர்கள் இதில் செல்கிறார்கள். 11 நாட்கள் விண்வெளி பயணத்துக்கு பிறகு சுனிதாவுடன் இந்த அட்லாண்டிஸ் ராக்கெட் பூமிக்கு திரும்பும்.

 

அட்லாண்டிஸ் ராக்கெட்டை செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் இன்று மாலை தொடங்குகிறது. ராக்கெட் அதன் ஏவுதளத்தில் தயாராக நிறுத்தப்பட்டுள்ளது. அதில் செல்லும் 7 வீரர்கள் ஏவுதளத்துக்கு வந்து விட்டனர்.

 

பூமிக்கு திரும்பும் சுனிதா, விண்வெளியில் தங்கி இருந்த போது தனது ரத்தம் சிறுநீர்(!!!?????!!!?!?!?!?) ஆகியவற்றை சோதனைக்காக எடுத்துள்ளார். 80 டிகிரியில் பாதுகாப்பாக அது வைக்கப்பட்டுள்ளது.

 

புளோரிடாவில் உள்ள கென்னடி ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும். இதுவரை வானிலை சாதகமாகவே உள்ளது. ஆனால் வெள்ளிக்கிழமை இடியுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று நாசா நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிந்தனைகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »