“இலக்கியங்கள் சொல்லும் காதல் பெரிய ஏரியா. அது ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. அதை விட்டு விட்டு விஞ்ஞானம் என்ன சொல்கிறது என்று மட்டும் பார்ப்போமா? ஒரு ஆணும் பெண்னும் சந்திக்கும் போது காதல் தோன்றுவதற்கு முன்னால், அட்ரினலினைப் போன்ற ரகளையான ரசாயனம் நரம்புகளின் வழியே ஒரு பூகம்பம் போல் வெடித்துக் கிளம்புகிறது. (இதைத்தான் `ஒரு வித்தியாசமான ஃபீலிங்’ என்கிறார்கள் காதலர்கள்) ஃபினைல்தைலமைன் என்கிற ரசாயனம் (காதலிகளுக்கு விருப்பமான சாக்லேட்டில் இது நிறைய உண்டு) அப்போது நரம்பு செல்களுக்கிடையே ரொமான்டிக்கான செய்திகளைப் பரப்புகின்றது. இதனுடன் டோபோமைன் மற்றும் நோர்பைன்ஃபரைன் போன்ற உற்சாக ரசாயனங்களும் கை கோர்த்துக் கொள்ள, அட்ரினலின் சுரந்து இதயம் ஏகாந்தமாய் உணர்ந்து படபடவென்று அடித்துக் கொள்கிறது. ஆண் பெண்ணுக்கிடையே காதல் தொடர்ந்து நீடிக்க ஆக்ஸிடோசின் என்கிற ரசாயனம் பெரும் உதவி செய்கிறது என்பதும் ஆச்சர்யமான செய்தி. இந்த கெமிக்கல் ரியாக்ஷன் எந்த ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயும் எப்போதும் தோன்றலாம். மற்றபடி கள்ளக்காதல் என்பதெல்லாம் நம்முடைய தமிழ் தினசரிகள் கண்டுபிடித்த கெட்ட வார்த்தை”
அரசு பதிகள் — குமுதம் 01/10/2008 இதழ்
11:53 முப இல் ஓகஸ்ட் 3, 2009
எனவே சுருக்கமாக, காதல் என்பது ரசாயனம். கற்பு என்பது ஆரோக்கியம். கற்பின் சிறப்பை காண்டம் காண்டமாக எழுதுவதற்கு பதில் காண்டம் உபயோகிப்பதை வலியுறுத்தினால் போதும்!
http://kgjawarlal.wordpress.com