ராமர் பாலத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவது குறித்து உலக நினைவுச் சின்னங்கள் கண்ணாணிப்பு அமைப்பு கவலை வெளியிட்டுள்ளதற்கு ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது:
“ராமர் பாலம் பழங்கால நினைவுச் சின்னங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நினைவுச் சின்னம் குறித்து ஆவணங்களை திரட்ட அமெரிக்காவில் இருந்து இயங்கி வரும் உலக நினைவுச் சின்னங்கள் கண்காணிப்பு அமைப்பு முடிவு செய்துள்ளது.
ராமர் பாலம் எவ்வளவு காலத்துக்கு முற்பட்டது என்பதை அறிய அந்த அமைப்பு, ராமர் பாலப் பகுதியில் உள்ள துகள்களை மாதிரியாக கொண்டுச் சென்று ஆய்வு நடத்த உள்ளது.
முன்னதாக இந்த அமைப்பின் தலைவர் மர்லின் பெரி இந்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், சர்வதேச கடல் ஆராய்ச்சி புகைப்படக்காரர்கள் உதவியுடன் இப் பாலத்தின் படம் எடுக்க அனுமதிக்க வேண்டும் என கோரியுள்ளார். மேலும், சுற்றுச்சூழலுக்கு இந்த பாலத்தால் கேடு விளையும் என்றும் மர்லின் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மறுமொழியொன்றை இடுங்கள்