அமெரிக்கா ரஷ்யா உள்பட பல்வேறு நாடுகள் விண்வெளியில் உருவாக்கி வரும் சர்வதேச மிதக்கும் ஆய்வுக்கூடத்தில் இந்திய வீராங்கனை(அன்னிய நாட்டுக்காக – அதுவும் அமெரிக்காவுக்காக உழைப்பதில் தான் நாட்டுக்கு பெருமையே உள்ளது?!!) சுனிதா வில்லியம் கடந்த 6 மாதங்களுக்கு மேல் தங்கி இருந்து ஆய்வு நடத்தி வருகிறார்.
அவரை பூமிக்கு அழைத்து வரவும் புதிய தளவாடங்களை ஆய்வுக்கூடத்துக்கு கொண்டு செல்லவும் அட்லாண்டிஸ் என்ற ராக்கெட்டை நாசா நிறுவனம் 8-ந்தேதி (இந்திய நேரப்படி 9-ந்தேதி காலை 5மணி) அனுப்புகிறது.
7 விண்வெளி நிபுணர்கள் இதில் செல்கிறார்கள். 11 நாட்கள் விண்வெளி பயணத்துக்கு பிறகு சுனிதாவுடன் இந்த அட்லாண்டிஸ் ராக்கெட் பூமிக்கு திரும்பும்.
அட்லாண்டிஸ் ராக்கெட்டை செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் இன்று மாலை தொடங்குகிறது. ராக்கெட் அதன் ஏவுதளத்தில் தயாராக நிறுத்தப்பட்டுள்ளது. அதில் செல்லும் 7 வீரர்கள் ஏவுதளத்துக்கு வந்து விட்டனர்.
பூமிக்கு திரும்பும் சுனிதா, விண்வெளியில் தங்கி இருந்த போது தனது ரத்தம் சிறுநீர்(!!!?????!!!?!?!?!?) ஆகியவற்றை சோதனைக்காக எடுத்துள்ளார். 80 டிகிரியில் பாதுகாப்பாக அது வைக்கப்பட்டுள்ளது.
புளோரிடாவில் உள்ள கென்னடி ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும். இதுவரை வானிலை சாதகமாகவே உள்ளது. ஆனால் வெள்ளிக்கிழமை இடியுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று நாசா நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மறுமொழியொன்றை இடுங்கள்