ஈராக்கிலுள்ள அன்பார் மாகாணத்தில் அமெரிக்க படையினரை கொலை செய்வதற்காக சாலையோரம் குண்டுவைக்க முயன்ற மூன்று பேர் மீது அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதலில் 3 குழந்தைகள் இறந்தனர்.
ஈராக்கின் தலைநகரான பாக்தாதில் இருந்து மேற்கே 65 கி.மீ. தொலைவில் உள்ள அன்பார் மாகாணத்திலுள்ள ஃபலூஜா என்ற இடத்தில் முக்கிய நெடுஞ்சாலையில் வெடிமருந்தை வைக்க முயன்ற 3 பேரை குறிவைத்து அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 வயது முதல் 11 வயது வரையிலான 3 குழந்தைகள் உயிரிழந்ததாக அமெரிக்க ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் அமெரிக்கப்படையினரின் தாக்குதலில் அவர்கள் துப்பாக்கி குண்டினால் கொல்லப்பட்டார்களா அல்லது அதையடுத்து நடந்த வெடிமருந்து வெடித்ததில் உயிரிழந்தார்களா என்பது உறுதியாக தெரியவரவில்லை என்றும் ராணுவ அலுவலகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் பற்றி உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மறுமொழியொன்றை இடுங்கள்