ஈரான் மீது போர் தொடுப்பதற்கு அமெரிக்கா தயாராக இல்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கண்டலினா ரைஸ் கூறியுள்ளார்.
மேட்ரிட் நகரில் ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் மிகில் மாரடினோஸ்சை சந்தித்து பேசிய பின்னர் பத்திரிக்கையாளர்களுடன் பேசும் பொழுது ரைஸ் இவ்வாறு தெரிவித்தார்.
ஈரானின் அணு தொடர்பான செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் பொழுது, “ஈரான் பிரச்சனையில் தங்களது கொள்கை என்ன என்பதை அதிபர் புஷ் தெ ளிவுபடுத்தியுள்ளதாகவும், அந்தக் கொள்கைக்கு அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் துணை அதிபர் ஆகியோர் ஆதரவு தெரிவித்து இருப்பதாகவும்” கூறினார்.
இதற்கு முன்னர் ஐநாவின் அணு கண்காணிப்பு அமைப்பின் தலைவர் முகம்மது எல்பராடி, ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.
இந்தப் பிரச்சனைக்கு தூதரக ரீதியில் தீர்வு காணும் வாய்ப்பு இருப்பதாகவும் ரைஸ் கூறினார்.
ஈரான் மீது ஏற்கெனவே ஐநா பாதுகாப்பு கவுன்சில் இரண்டு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. 3வது தடை விதிக்க அமெரிக்கா வலியுறுத்தி வருவது கவனிக்கத்தக்கதாகும்.
மறுமொழியொன்றை இடுங்கள்